Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீரங்கம் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பரபரப்பு

Print PDF

தினமலர் 22.02.2010

ஸ்ரீரங்கம் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பரபரப்பு

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் சத்துணவு கூடம் கட்ட வேண்டிய இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவில் பம்பிங் ஸ்டேஷன் செயல்படுகிறது. இதன் அருகே சத்துணவு கூடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கி இருந்தது. ஆனால் அதே இடத்தில் அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் மற்றும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சத்துணவு கூடம் கட்டும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை புல்டோசர் மூலம் இடித்து தள்ளினர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்திய சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Last Updated on Monday, 22 February 2010 06:30