Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தியாகதுருகம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆய்வு

Print PDF

தினமலர் 22.02.2010

தியாகதுருகம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆய்வு

தியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து டி.எஸ்.பி., யுடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

தியாகதுருகம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப் புக்களை அகற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ஆறுமுகம், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆக்கிரமிப்புகள் உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். பஸ் நிலையம், நகரின் மையத்தில் செல் லும் தேசியநெடுஞ்சாலை, சந்தைமேடு ஆகிய இடங்களை பார்வையிட்டபின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது போதுமான பாதுகாப்பு வழங்கும்படி பேரூராட்சி சார்பில் டி.எஸ்.பி., ஆறுமுகத்திடம் துணைத்தலைவர் பொன்ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். பேரூராட்சி மன்ற கவுன் சிலர்கள் அபரஞ்சி, வேலு மணி, அலுவலக ஊழி யர்கள் ராஜி, சுகுமார், ராதாகிருஷ்ணன், சசி, கோவிந்தன் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 22 February 2010 06:34