Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 மாடி கட்டிட ஆக்ரமிப்பு மாநகராட்சி அதிரடி அகற்றம்

Print PDF

தினமலர் 23.02.2010

2 மாடி கட்டிட ஆக்ரமிப்பு மாநகராட்சி அதிரடி அகற்றம்

சேலம்: சேலம் குரங்குச்சாவடியில், மாநகராட்சி இடத்தை ஆக்ரமித்து கட்டியிருந்த, இரண்டு மாடி கட்டிடம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் குரங்குச் சாவடி மெயின் ரோட்டில் உள்ளது. அந்த இடத்தில் சர்வீஸ் சாலை அமைப்பதென மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

சர்வீஸ் சாலை இடத்தை ஆக்ரமித்து, பாண்டவன் என்பவர் இரண்டு மாடி கட்டிடம் கட்டியிருந்தார். அதை அகற்ற மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி உத்தரவிட்டார். கட்டிட உரிமையாளருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மாநகராட்சி உதவி ஆணையர் நெப்போலியன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், உதவிப் பொறியாளர்கள் சுப்ரமணி, பெட்சி ஞானலதா உட்பட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர்.

அக்கட்டிடத்தின் நான்கடி ஆக்ரமிப்பை, நவீன இயந்திரங்களின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் படிப்படியாக இடித்து தள்ளும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:08