தினமலர் 24.02.2010
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் நேற்று சாலையோரமிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட் டன.காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வரதராஜப் பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் இருபுறமும் அழகிய கைப்பிடியுடன் கூடிய நடைபாதை, தெருவின் இருபுறமும் அழகிய தூண்கள் அமைக்கப்பட உள்ளன.அதையொட்டி, சன்னிதி தெருவில் இருபுற முமி ருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.