Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற கட்டட கட்டுமானப் பணி நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி 24.02.2010

அனுமதியற்ற கட்டட கட்டுமானப் பணி நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை

கோவை, பிப்.23: அனுமதியற்ற கட்டட கட்டுமானப் பணியை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

கோவை மாநகராட்சி 1}வது வார்டு பீளமேடு}ஆவாரம்பாளையம் சந்திப்பு பகுதியில் அனுமதியின்றி 4 மாடி கட்டடம் கட்டப்படுவதாக நகரமைப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவது விசாரணையில் தெரியவந்தது. போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டடம் கட்டப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கட்டுமானப் பணியை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். கட்டடத்தின் அருகே மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் பொருத்தப்பட்டது. அங்கே வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் செங்கல்கள், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:28