தினமலர் 05.03.2010
பெரிய காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காஞ்சிபுரம் : பெரியகாஞ்சிபுரம் தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகாஞ்சிபுரம் தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஏகாம்பரநாதர் கோவிலுக்காக, புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த வீதியில், தேரை நிறுத்துவதற்கு வசதியாக, தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. நகராட்சி சார்பில் பழைய தேர் நின்ற பகுதியில் இருந்த வெல்டிங் கடை நேற்று அகற்றப்பட் டது. கடை உரிமையாளர் நோட்டீஸ் வழங்கவில்லை எனக் கூறியதை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். தற்போது அகற்றப் பட்ட கடை அருகில் சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அவற்றையும் அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.