Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு சாலையை மீட்டது மாநகராட்சி

Print PDF

தினமணி 06.03.2010

ஆக்கிரமிப்பு சாலையை மீட்டது மாநகராட்சி

கோவை, மார்ச் 5: கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.

÷கோவை மாநகராட்சியின் 61}வது வார்டுக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம், மனையடி ஜோதிடர் வீதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி சாலை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

÷இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கே.புருஷோத்தமன் மற்றும் மக்கள் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். அதையடுத்து ஆணையரின் உத்தரவுப்படி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றினர்.

÷இதன் மூலம், வேலாண்டிபாளையம்- ராமலிங்கம் நகரில் இருந்து தடாகம் சாலைக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இருந்த காரணத்தால் இதுவரை தடாகம் சாலைக்குச் செல்ல ராமலிங்கம் நகர் பகுதியினர் நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

Last Updated on Saturday, 06 March 2010 06:24