தினமணி 06.03.2010
ஆக்கிரமிப்பு சாலையை மீட்டது மாநகராட்சி
கோவை, மார்ச் 5: கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
÷கோவை மாநகராட்சியின் 61}வது வார்டுக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம், மனையடி ஜோதிடர் வீதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி சாலை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.
÷இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கே.புருஷோத்தமன் மற்றும் மக்கள் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். அதையடுத்து ஆணையரின் உத்தரவுப்படி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றினர்.
÷இதன் மூலம், வேலாண்டிபாளையம்- ராமலிங்கம் நகரில் இருந்து தடாகம் சாலைக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இருந்த காரணத்தால் இதுவரை தடாகம் சாலைக்குச் செல்ல ராமலிங்கம் நகர் பகுதியினர் நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.