தினமலர் 10.03.2010
2 கடைகள் நேற்று அதிரடியாக அகற்றம்
கும்பகோணம்,: கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலை ஒட்டியுள்ள 2 கடைகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரே உயர்மட்டஹைமாஸ் விளக்கு நகராட்சியால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஜி.கே.மூப்பனார் சிலை வைக்க நகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடத்தில் ஜி.கே.மூப்பனாரின் சிலை வைக்க காங். கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதனால் ஹைமாஸ் விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டுஉள்ளது.இதையடுத்து உச்சிப்பிள்ளையார் கோயிலின் மேற்கு பகுதியில் உள்ள 2 கடைகளை அகற்றிவிட்டு ஹைமாஸ் விளக்கு வைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி வளையல் கடை வைத்துள்ள சாமிநாதன், பெட்டிக் கடை வைத்துள்ள யுவராஜ் ஆகியோ ரது 2 கடைகளும் நகராட்சியால் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.
இதற்கிடையில் கடைகளை அகற்றக் கூடாது என சாமிநாதனும், யுவராஜும் கோர்ட்டில் தடை பெற்று உள்ளனர். ஆனால் கோர்ட் தடையை மீறி நகராட்சி நிர்வாகம் கடைகளை அகற்றியதால் வணிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காசி விஸ்வநாதர் கோயிலின் உப கோயிலாக உச்சிப் பிள்ளையார் கோயில் நிர்வகிக்கப்ப டுகிறது. கடந்த ஒருவாரம் முன்பு கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அலுவலர்கள் இந்த 2 கடைகளையும் அகற்றுவதற்கு சென்றனர். அப்போது கோர்ட் தடை ஆணையை கடை வைத்துள்ளவர்கள் 2 பேரும் செயல் அலுவலரிடம் காண்பித்தனர். இதனால் 2 கடை களையும் அகற்ற முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் திரும்பி வந்து விட்டனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளை விதிமுறை களுக்கு மாறாக அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது.