தினமலர் 12.03.2010
ஆக்கிரமிப்பு அகற்றிய புள்ளி விபரம் சேகரிப்பு
ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு பல முறை தேதி குறிக்கப்பட்டது. ஆனால் ஒரு அதிகாரி இருந்தால், மற்றவர் இருப்பதில்லை. அதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடந்த 4ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்ற முடிவானது. இது சம்பந்தமாக பஞ்சாயத்து சார்பில் தண்டோரா போடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் டி.எஸ்.பி., ஜெயராமன் போலீஸாருடன் கடை, கடையாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினார். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை எடுத்துக் கொண்டனர். பலர் எடுக்கவில்லை. இதையடுத்து 4ம் தேதி ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆனால், முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றியதாக கூறி கடைக்காரர்கள் கடந்த 6ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தற்போது பஞ்சாயத்துகள் சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட கடைகள் பற்றிய புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.