Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரங்கப்பிள்ளை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 12.03.2010

ரங்கப்பிள்ளை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி
, மார்ச் 11: புதுச்சேரி ரங்கப்பிளளை வீதியில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை போக்குவரத்து போலீஸôரால் அகற்றப்பட்டது.

÷புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் பெரியகடை மார்க்கெட் உள்ளது. இம்மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். ÷

இந்த வீதியில் ஆக்கிரமிப்புகளால் மார்க்கெட்டுக்கு வருவோரும், அவ்வழியாக வந்து செல்வோரும் அவதிப்படுவதாக போக்குவரத்து காவல் கண்காணிபாளர் ஜி.பி.பழனிவேலுவுக்கு புகார்கள் வந்தது.

÷இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிவேலு தலைமையிலான போலீஸôர் அவ்வீதியில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த போர்டுகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோரக் கடைகள், 3 சக்கர சுமைத் தூக்கும் வண்டிகள், தள்ளு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

Last Updated on Friday, 12 March 2010 09:20