Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 19.03.2010

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து முதுநகர் மணிக்கூண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் முதுநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பும், நடைபாதை பகுதிகளும் ஆக்கிரமிக் கப்பட்டிருந்ததால் போக் குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அறிவித்தனர்.இதைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் கடலூர் தாசில்தார் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஜெய் சங்கர், முருகன், நகராட்சி ஊழியர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டிலிருந்து கடலூர் முதுநகர் வரையுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடைகாரர்கள் தாமாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

Last Updated on Friday, 19 March 2010 06:21