Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 19.03.2010

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலை தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகளை போலீஸôர் துணையோடு அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எதிரே தேரடியில் உள்ள சக்கரகுளம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை

மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டபோது, 20 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பழைமையான மாணிக்கவாசகர் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அதைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். அங்கிருந்த ஒரு கடை மட்டும் நீதிமன்றத் தடையாணையால் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் டிஎஸ்பி வைத்தியலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.விஸ்வநாதன், கோட்டாட்சியர் பத்மா, வட்டாட்சியர் சுப்பிரமணி, நகராட்சி ஆணையர் சேகர் ஆகியோர் நேரில் சென்று வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்கிருந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன. சம்பவ இடத்தில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.