தினமலர் 25.03.2010
போடியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
போடி: போடியில் கோயிலை சாதகமாக பயன்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். போடி நகராட்சி கூட்டம் தலைவர் ரதியாபானு தலைமையில் நடந் தது. துணைத்தலைவர் சங்கர், கமிஷனர் சரவணக்குமார், பொறியாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவாதம் வருமாறு: துணைத்தலைவர்: பஸ் ஸ்டாண்ட், மெயின்ரோடுகளில் மட்டுமே துப்புரவு பணிகள் நடக்கிறது. மற்ற பகுதிகளிலும் துப்புரவு பணியை மேம்படுத்த கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெயராஜ்: பெரியாண்டவர் ஹை ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பை பாஸ் ரோடாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.முருகன்: கோயிலை சாதகமாக பயன்படுத்தி மெயின்ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். போக்குவரத்து இடையூறாக உள்ளவற்றை அகற்றவேண்டும்.
கமிஷனர்: ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி முழுமையாக அகற்றப்படும்.ரவிக்குமார்: நிழல்தரும் மரங் களை நகராட்சி பகுதியில் வளர்க்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.கமிஷனர்: அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தன்னிச்சையாக தெருக்களில் குப்பை கொட்டும் குடியிருப்பு வீடுகளுக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாயும், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்களுக்கு 200 ரூபாயும், உணவு விடுதி மற்றும் சிறிய திருமண மண்டபங்களுக்கு 500 ரூபாயும், பெரியவைகளுக்கு ஆயிரம் ரூபாயும் வசூலிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான பயனாளிகள் 25 நபர்களை தேர்வு செய்து தலா 500 ரூபாய் வீதம் வழங்க முடிவு செய்யப் பட்டது.