Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொட்டாரத்தில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

Print PDF

தினமணி 05.05.2010

கொட்டாரத்தில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

கன்னியாகுமரி, ஏப். 4: கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆக்கிரமிப்பு கடையை சனிக்கிழமை அதிகாரிகள் அகற்றினர். கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான வணிகவளாகம் அமைந்துள்ளது. இதன் அருகே பேரூராட்சி காலி இடத்தில் தனியார் ஒருவர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் விதமாக பெட்டிக்கடை அமைத்தார். இதனை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதையடுத்து அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடையை அகற்றினர். கடையை அகற்றும் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Last Updated on Monday, 05 April 2010 10:14