தினமலர் 06.04.2010
ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதையொட்டி ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன் தலைமையில் நேற்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் நேற்று ராமேஸ் வரம் பஸ் ஸ்டாண்டு துவங்கி மேலத்தெரு, கடைத் தெரு, வர்த்தகன்தெரு வழியாக வேர்கோடு வரை சென்று ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி.,இயந்திரம் கொண்டு அகற்றினர்.