தினமலர் 22.04.2010
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆவடி : ஆவடி, அம்பத்தூர் நகராட்சி பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
ஆவடி, நகராட்சி புதிய அலுவலக கட்டடம் முடியும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தின், அருகிலிருந்த ஒரு கட்டடம் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. புதிய அலுவலக கட்டடம் விரைவில் திறக்கப்படவுள்ளதால், இந்த கட்டடத்தை நகராட்சி ஊழியர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இதற்காக, பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புக்குள்ளான 30 கடைகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.