தினமலர் 29.04.2010
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி ஊழியர்களுக்கும், வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை என்று நகராட்சியில் நடந்த குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டது.இதையடுத்து நகராட்சி பொறியாளர் ராமசாமி, நகர் நல அலுவலர் பழனியப்பன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் மேற்கு மரியநாதபுரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றினர்.அப்போது வீட்டின் உரிமையாளர்களுக்கும்,நகராட்சி அலுவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.நகராட்சி ஊழியர்கள் கூறியதாவது: ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி பலமுறை தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் அகற்றிக் கொள்ளாததால் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனர்.