Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி 29.04.2010

ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

பெங்களூர், ஏப்.28: மழை காலத்துக்கு முன் ஏரிகளை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்த முதல்வர் எடியூரப்பா, திடீரென தனதுதில்லி பயணத்தை ரத்து செய்தார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாநில

உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யாவை அனுப்பிவைத்தார். இதையடுத்து பெங்களூர் நகரில் பிடிஏ மேற்கொள்ளும் ஏரிகள் சீரமைப்புப் பணியை பார்வையிட புதன்கிழமை காலை 8 மணிக்கு அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றார் எடியூரப்பா.

உல்லால், மல்லசந்திரா, காதீநகர், கோனசந்திரா, மற்றும் சோபுரம் ஏரிகளை எடியூரப்பா பார்வையிட்டார். இந்த ஏரிகளில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

உல்லால் ஏரிக்கு எடியூரப்பா சென்றபோது அந்த ஏரியை சுத்தப்படுத்தி, சீரமைக்கும் பணி குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எல்லப்ப ரெட்டி முதல்வரிடம் விவரித்தார். ஏரி பாதுகாப்பு, நிலத்தடி நீரை அதிகப்படுத்த எடுக்க வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். உல்லால் ஏரியில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த ஏரிப் பகுதிக்கு முதல்வர் வந்தபோது அவரை விஸ்வேஸ்வரய்யா லே-அவுட்டில்குடியிருக்கும் பொதுமக்கள் சந்தித்து குறைகளைத் தெரிவித்தனர். அந்த லே-அவுட்டில் அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் எடியூரப்பா உறுதி அளித்தார்.

பிறகு அங்கிருந்து மல்லசந்திரா ஏரிப்பகுதிக்கு எடியூரப்பா சென்றார். அந்த ஏரியில் தற்போது நீர் இல்லை. இதனால் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. அங்கு எடியூரப்பாவிடம் மனு ஒன்றை அளித்தார் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ்.

ஏரியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆழ் குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. எனவே, அப்பகுதியில் குடிநீர் விநியோகத்துக்கு நிரந்தர ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். மழைக் காலத்துக்கு முன் ஏரிகளை தூர் வாரும் பணியை செய்து முடிக்க உடன் சென்றிருந்த அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டார்.

பிறகு அங்கிருந்து கெங்கேரி துணை நகருக்கு சென்றார் எடியூரப்பா. அங்கு சென்றதும் முக்கிய சாலையில் இறங்கி சற்று தொலைவில் உள்ள காதீநகர் ஏரிப் பகுதிக்கு நடந்தே சென்றார் எடியூரப்பா. அந்த ஏரியைச் சுற்றி 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு குடியிருக்கும் 2 ஆயிரம் குடும்பத்தினரை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார் எடியூரப்பா.

நியாய விலை கடையில் திடீர் சோதனை: அங்கிருந்து திரும்பும்போது வழியில் இருந்த நியாய விலை கடைக்கு திடீரென சென்றார் எடியூரப்பா. அந்தக் கடையின் வரவு-செலவு நோட்டை பார்வையிட்டார். எடியூரப்பாவுடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஸ்ரீநிவாஸ், ஷோபா கரந்த்லஜே,மேயர் எஸ்.கே. நடராஜ், துணை மேயர் தயானந்த், பி.டி.. தலைவர் சித்தய்யா உள்பட உயர் அதிகாரிகள் எடியூரப்பாவுடன் சென்றிருந்தனர்.