தினமணி 30.04.2010
அரியலூரில் ஆக்கிரமிப்புகள் இடிப்பு
அரியலூர், ஏப். 29: அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை, சாலைப் பணியாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் வியாழக்கிழமை அகற்றினர்.
அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பேருந்து செல்ல முடியாத வகையில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் உத்தரவின் பேரில், நகராட்சி நிர்வாக அலுவலர் த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் மேற்பார்வையில், சாலைப் பணியாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் அரியலூர் பேருந்து நிலையம், சத்திரம், எம்.பி. கோயில் தெரு, மார்க்கெட் தெரு ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.