தினமலர் 03.05.2010
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் விநாயகர் கோவில் இடிப்பு
திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் இருந்த விநாயகர் கோவில் நேற்று அதிகாலை இடிக்கப்பட்டது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், சுரங்க நடைபாதை பகுதியில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது. இதையொட்டி, அப்பகுதி விநாயகர் கோவிலில் இருந்த சிலைகள், ஒரு மாதத்துக்கு முன் அகற்றப்பட்டன. நேற்று அதிகாலை விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ராஜா, தாசில்தார் பாலசுப்ரமணியம் மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், அதிகாலை 4.30 மணியளவில் கோவில் இடிக்கப்பட்டது.