Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையோரத்தில் கட்டப்பட்ட 2 கோயில்கள், 14 வீடுகள் அகற்றம்

Print PDF

தினமணி 03.05.2010

சாலையோரத்தில் கட்டப்பட்ட 2 கோயில்கள், 14 வீடுகள் அகற்றம்

கோவை, மே 2: சாலையோர ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட 2 கோயில்கள், 14 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.

÷உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி கோவை நகரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகரின் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடக்கின்றன.

÷பாப்பநாயக்கன்பாளையம், கருப்பாத்தாள் லேஅவுட்டில் இருந்து அவிநாசிசாலை நவஇந்தியா வரை திட்டச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

÷இச்சாலையில், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த கருப்பராயன், விநாயகர் கோயில்கள், 14 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றினர்.

÷அப்போது அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.