Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர்நிலை ஆக்கிரமிப்பு: கட்டடங்கள் அகற்றம்

Print PDF

தினமலர் 05.05.2010

நீர்நிலை ஆக்கிரமிப்பு: கட்டடங்கள் அகற்றம்

அம்பத்தூர் : அம்பத்தூர் அருகே நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஒரகடம், காந்தி சாலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப் பட்டு இருந்தன.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரங்களுடன் சென்றனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந்த ஆறு வீடுகளை இடித்து தரைமட்டமாக் கினர்.நகராட்சி ஊழியர்களின் இந்த நடவடிக்கைக்கு வீடுகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளை இடிக்க வந்த ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.பாதுகாப்பிற்காக வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், ஆக்கிரமிப்பு வீடுகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளினர்.

Last Updated on Wednesday, 05 May 2010 05:56