அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து தள்ள நோட்டீஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய 11 ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் துவங்க உள்ளது.தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு நான்குவழிச்சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு அமைக்கும் பணிக்கு சுமார் 3 கோடி ரூபாயிற்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடியில் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடமாக இருந்த ஈகிள் புக் சென்டர் உள்ளிட்ட பெரிய கட்டடங்கள் இடித்து பெரும் போலீஸ் பட்டாளத்தின் பாதுகாப்புடன் இடித்து தள்ளப்பட்டன.