Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து தள்ள நோட்டீஸ்

Print PDF
தினமலர்              17.08.2012

அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து தள்ள நோட்டீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய 11 ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் துவங்க உள்ளது.தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு நான்குவழிச்சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு அமைக்கும் பணிக்கு சுமார் 3 கோடி ரூபாயிற்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடியில் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடமாக இருந்த ஈகிள் புக் சென்டர் உள்ளிட்ட பெரிய கட்டடங்கள் இடித்து பெரும் போலீஸ் பட்டாளத்தின் பாதுகாப்புடன் இடித்து தள்ளப்பட்டன.
 
இதற்கான பணிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இனிமேல் போக்குவரத்து நெருக்கடிக்காக எந்த ஒரு கட்டடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகம் தயங்காது என்றும், ஆக்கிரமிப்புகளை பொறுத்தமட்டில் யார் சொன்னாலும் அதனை தடுக்க முடியாது என்கிற பரவலான கருத்து வியாபாரிகள் மத்தியில் உருவானதாக கூறப்படுகிறது. இதனால் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளுக்கு பணி செய்வது எளிதான நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
தொடர்ந்து ஆக்கிரமிப்ப தூத்துக்குடியில் அகற்றப்பட்டாலும் அதனால் பிரச்னை, மோதல் என்கிற எந்த ஒரு சிறு பிரச்னை இல்லாமல் இதற்கான பணிகள் அமைதியாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரசின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் இதுதான் நடக்கும் என்பது தூத்துக்குடியில் உள்ளவர்களுக்கு முழுமையாக தெரியும் நிலை ஏற்பட்டுவிட்டதால் இதற்கான பணிகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் அடுத்த கட்டமாக மிகப் பெரிய ஆக்கிரமிப்பு அகற்றும் மூன்றாம் கட்ட பணி இன்னும் ஒரிரு நாளில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மொத்தம் 410 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள மீட்டர் கொண்ட கடைகள், அதற்கு குறைவான மீட்டர் கொண்ட கடைகள் போன்ற ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து தள்ள வருவாய்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக்கிற்கு மேல் புறம், சிஎஸ்ஐ சர்ச் கீழ்புறம் உள்ள மிகப் பெரிய வர்த்தக நிறுவனம் மற்றும் 11 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளீர்கள்.
 
நீங்களாக அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுங்கள். இல்லை என்றால் அரசு மூலம் அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டதால் அவர்களாக அந்த ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் ஜெ.சி.பி உதவியுடன் இதன் தொடர்ச்சியாக அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அனைத்தும் இடித்து தள்ளப்படும் என்று வருவாய்துறை மற்றும் மாநகராட்சி துறைகளின் சார்பில் அதிரடி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பழைய பஸ் ஸ்டாண்டை எதிரே உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை எந்த முறையில் மேற்கொள்ளலாம் என்று தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்குவது குறித்தும் தீவிர டிஸ்கஸ் செய்யப்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு முகப்பேரில் ரூ 10 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி

Print PDF
தினகரன்   08.08.2012

சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு முகப்பேரில் ரூ 10 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி

ஆவடி, : முகப்பேரில் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட்ட ரூ 10 கோடி அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
 
அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட முகப்பேர் யஸ்வந்த் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ் சட்டர் ஜிக்கு புகார் வந்தது.

அவரது உத்தரவின்படி, அம்பத்தூர் மண்டல பொறியாளர்கள் பெருமாள், பாஸ்கரன், தாசில்தார் ராஜு, துணை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அந்த இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, உடனடியாக மாநகராட்சி மற்றும் வருவாய் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள சுவரை இடித்து தள்ளினர். ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து 60 சென்ட் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத் தின் மதிப்பு ரூ 10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  ‘அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 

அத்திப்பட்டு ஆக்கிரமிப்பு ரூ.10 கோடி நிலம் மீட்பு

Print PDF

தினமலர்                    08.08.2012

அத்திப்பட்டு ஆக்கிரமிப்பு ரூ.10 கோடி நிலம் மீட்பு

அம்பத்தூர் : தனியார் ஆக்கிரமித்திருந்த, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ஜஸ்வந்த் நகரில், 12 கிரவுண்டு, அரசு புறம்போக்கு நிலத்தை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜியிடம், சமீபத்தில் புகார் தெரிவித்தனர்.

கலெக்டர்  உத்தரவின்  பேரில்,  அம்பத்தூர்  தாசில்தார்  ராஜு,   துணை    தாசில்தார்   சீனிவாசன், வருவாய்     ஆய்வாளர்      மணிகண்டன்     மற்றும்     மாநகராட்சி   அதிகாரிகள்   ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை நேற்று பார்வையிட்டனர். பின்னர்,  அம்பத்தூர்  எஸ்டேட் போலீசார் முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 35 of 204