தினமணி 02.08.2012
"குமரி ரதவீதிகளில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்'
கன்னியாகுமரி, ஆக. 1: கன்னியாகுமரி ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என பேரூராட்சித் தலைவி பிரபா வின்ஸ்டன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி ரத வீதி தெருக்களில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பகவதியம்மன் கோவில் திருவிழாவின் போது தேர் செல்ல வசதியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரூராட்சி ஊழியர்கள் இதற்கான நடவடிக்கையில் விரைந்து செயல்படுவார்கள். மேலும் வறட்சி காரணமாக கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் வழங்குவதில்பிரச்னை இருந்து வருகிறது. குடிதண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் குடிதண்ணீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் அவர்.