Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

வடசேரி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி               28.07.2012

வடசேரி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகர்கோவில், ஜூலை 27: நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

 நாகர்கோவில் மையப் பகுதியான வடசேரியில் கிறிஸ்டோபர் பஸ் நிலையமும், மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு பஸ் நிலையங்களும் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

 பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் நடைமேடைகளில் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் மட்டுமின்றி, நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம், நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் தெரிவித்து இருந்தனர்.

 இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 24 ஆம் தேதி நகராட்சி பெண் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் அங்கிருந்த கடை ஊழியர்கள் தடுத்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திரும்பினர்.

 இதற்கிடையில் வெள்ளிக்கிழமை காலை நகராட்சி வருவாய் அலுவலர் மாணிக்கரசி, நகரமைப்பு ஆய்வாளர்கள் கெபின்ராய், சந்தியா மற்றும் ஊழியர்கள் வடசேரி பஸ் நிலையத்திற்கு ஜே.சி.பி. இயந்திரத்துடன் சென்றனர். அங்கு போலீஸôர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 பஸ் நிலையத்தின் மேற்குப் பகுதியில் 20 கடைகள் வாடகைக்கு விடபபட்டுள்ளன. இந்தக் கடை உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து கடையை விரிவுபடுத்திருந்தனர். இந்த விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் உள்ள கட்டுமானங்களை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர்.

 அதுபோல் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் 22 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் இரு ஹோட்டல்கள் ஆகும். இந்தக் கடைகளும் அனுமதிக்கப்பட்டிருந்த இடத்துக்கு வெளியே ஆக்கிரமித்து கட்டுமானங்களைக் கட்டி விரிவுப்படுத்தி இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

 ஒரு ஹோட்டலில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முற்பட்டபோது, கடை உரிமையாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த வழக்குரைஞர்கள் நகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருப்பதாக அந்த கடை உரிமையாளர் தெரிவித்தார். அப்படியானால் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை காட்டும் படி அதிகாரிகள் கூறினார்.

 இதனால் வழக்குரைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது எனக் கூறி ஜே.சி.பி. இயந்திரத்தின் முன் போய் நின்றனர்.

 இதனால் சிறிது நேரம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. இதை கவனித்துக் கொண்டிருந்த பிற கடைக்காரர்கள், எங்கள் கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, இந்த கடையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தயக்கம் காட்டுவதாகக்கூறி அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அந்த ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்டிருந்த அதிகப்படியான ஆக்கிரமிப்பு பகுதியும் அகற்றப்பட்டது.

 கண்காணிப்பு தேவை

 பஸ் நிலையத்துக்குள் உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படுவது வழக்கம். சில நாள்கள் கழித்து அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது வாடிக்கையாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் இனி பஸ் நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாதவாறு அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

 பஸ் நிலையத்தின் தெற்குப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் உள்ள இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். இப்போது இரு சக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்படுமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம்.

 

சாலை ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு

Print PDF

தினமலர்                 27.07.2012

சாலை ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு

பெருந்துறை: பெருந்துறை நகரின் மையப்பகுதி வழியாக, சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

நெடுஞ்சாலையை பல இடங்களில் ஆக்கிரமித்து, கடைக்காரர்கள், கடையின் முன் பந்தல், கொட்டகை மற்றும் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். மேற்படி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையின் முன் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பெருந்துறையில் போக்குவரத்து போலீஸார் இல்லாததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் நிற்பதில்லை. அதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.சாலையை ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்களுக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் நோட்டீஸ் வழங்கியும், டவுன் பஞ்சாயத்து பணியாளர் மூலம், டாம்டாம் போட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினர்.காலக்கெடுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால், நெடுஞ்சாலைத் துறையினர் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றுவர் எனவும், அதற்கான செலவு கடைக்காரரிடம் வசூலிக்கப்படும் என்றும், அகற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்ட


 

விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய ஆதாரம்: விவரம் சேகரிக்கிறது சி.எம்.டி.ஏ.,

Print PDF

தினமலர்                 27.07.2012

விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய ஆதாரம்: விவரம் சேகரிக்கிறது சி.எம்.டி.ஏ.,

 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான ஆதாரங்களை கேட்டு, கட்டட உரிமையாளர்களுக்கு தனித்தனி கடிதங்கள் அனுப்பும் பணிகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் தொடர்பாக, ஜூலை 24ம் தேதிக்குள் அவசரச் சட்டம் பிறப்பித்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கடந்த மாதம் 4ம் தேதி, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப் படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை, தமிழக அரசு கடந்த வாரம் பிறப்பித்தது.

வழக்கு தாமதமாகிறது:இதையடுத்து, இவ்வழக்கு, நேற்று முன்தினம் (ஜூலை 24ம் தேதி) விசாரணைக்கு வரும். முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர்.ஆனால், அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், தலைமை நீதிபதியை அணுகி, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்; வழக்கு விசாரணையில் ஆஜராக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை, செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

கண்காணிப்புக்குழு கூட்டம்;விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டால் அமைக்கப் பட்ட கண்காணிப்புக் குழுவின் கருத்தை கேட்காமல், தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்து உள்ளதாக, குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேவசகாயம் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

கடிதங்கள் குறித்து ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், ஆகஸ்ட் 13ம் தேதி, கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் எழுந்துள்ள சூழல் குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஒரு வாரம் கெடு?இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள், தங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில், இரண்டு லட்சம் கட்டடங்கள் விதிமீறல் கட்டடங்கள் என, பட்டியலிடப் பட்டுள்ளன.

இவ்வாறு, தங்களுக்கு தெரிந்த நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களின் முகவரிக்கு, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பப் பட்டு வருகின்றன.
அதில், ""உங்கள் கட்டடம், 2007ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதா? அதற்கான ஆதாரங்களை, ஒரு வாரத்துக்குள் சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் கட்டடத்தின் தற்போதைய நிலை, அதன் வரைபடம் போன்ற ஆவணங்களையும், இத்துடன் அனுப்ப வேண்டும்,'' என, குறிப்பிட்டு உள்ளதாக சொல்லப் படுகிறது.விதிமீறல் கட்டடங்கள் என பட்டியலிடப்பட்ட அனைத்து கட்டடங்களுக்கும், ஆரம்பகட்ட விவர சேகரிப்புக்காக, இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -
Last Updated on Friday, 27 July 2012 05:27
 


Page 38 of 204