Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கட் அவுட், பேனர் அகற்றம்

Print PDF

தினகரன்                 26.11.2010

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கட் அவுட், பேனர் அகற்றம்

கோவை, நவ.26: கோவை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கட் அவுட், பேனர், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.

கோவை நகரில் பிரதான ரோடு, குறுக்கு சந்து உட்பட பல்வேறு பகுதியில் கட் அவுட், பேனர், விளம்பர பலகைகள் அதிகமாக இருப்பதாக புகார் வந்தது. கோ வை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் (தெற்கு) லட்சுமணன், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சுங்கம், திருச்சி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் கட் அவுட், பேனர், போஸ்டர்களை அகற்றினர். அவிநாசி ரோட்டில் பீளமேடு, ஹோப் காலேஜ், அண்ணாசிலை, சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்டு, மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை மேம்பாலம், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம், ரயில் நிலையம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று 500க்கும் மேற்பட்ட பேனர், கட் அவுட், போஸ்டர் அகற்றப்பட்டது. ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக, சிக்னல், நடைபாதைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைக்க கூடாது என எச்சரிக்கப்பட்டது. கட் அவுட், பேனர் அகற்ற அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கட் அவுட், பேனர்களை வைக்க அனுமதிக்கவில்லை. கட்சியினரிடம் பேனர், கட் அவுட் ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

 

கன்னியாகுமரியில் 25 ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினகரன்               25.11.2010

கன்னியாகுமரியில் 25 ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

நாகர்கோவில், நவ.25: கன்னியாகுமரியில் பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 25க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு கடைகளை அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர்.

கன்னியாகுமரியில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தற்போது வந்து செல்ல துவங்கியுள்ளனர்.

சீசனையொட்டி கன்னியாகுமரி பகுதியில் 286 தற்காலிக கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதியளித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வியாபாரிகள் சிலர் தற்காலிக கடைகளை அமைத்து பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். சிலர் சிற்றுண்டி கடைகளையும் அமைத்திருந்தனர். இதனால் தங்களுக்கு விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி கடைகள் ஏலம் எடுத்திருந்த கடைகாரர்கள் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பையாவை சந்தித்து முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. கன்னியா குமரியில் தங்கநாற்கர சாலை நிறைவு பெறும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும் கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் இருந்து காந்திமண்டபம் வரை சாலையின் ஒருபுறம் முறைப்படி ஏலம் எடுத்த வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். இதன் எதிர்புறத்தில் ஆக்ரமிப்பாளர்கள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கண்மாயில் கட்டப்பட்டுள்ள 40வீடுகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன்           25.11.2010

கண்மாயில் கட்டப்பட்டுள்ள 40வீடுகளை அகற்ற உத்தரவு

மதுரை, நவ.25: திருமங்கலம் அருகே உள்ளது மறவன்குளம். இங்குள்ள கண்மாய் தொடர் மழைக்கு நிறைந்தது. இந்த கண்மாயிலிருந்து நீர் வெளியேறும் கால்வாயில் கக்கன் காலனியில் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி ஆக்கிரமித்திருந்தனர். இதனால் கால்வாய் சுருங்கியது. கண்மாய் நிறைந்து வெளியேறி வெள்ள நீர் கால்வாயில் செல்ல முடியாத நிலையில், நகருக்குள் புகுந்தது. இதனால் தங்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 40வீடுகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கலெக்டர் காமராஜ், எம்எல்ஏக்கள் மூர்த்தி, லதா அதியமான் உள்பட பலர் சென்றனர். அப்போது தண்ணீர் வெளியேறும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றனர். அவர்களிடம் கலெக்டர் பேசுகையில், ‘ஆக்கிரமித்திருப்பதே தவறு. இந்நிலையில் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமில்லை. ஆக்கிரமிப்பால் பல நூறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உடனே ஆக்கிரமிப்பிலுள்ள வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்றார்.

இதையடுத்து திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட நகராட்சிகளிலிருந்து இயந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் 40க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுகின்றன

 


Page 47 of 204