தினமணி 11.11.2010
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் தகவல்மதுரை
, நவ.10: மதுரை நகரில் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
:மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றன
. இதைத் தொடர்ந்து பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல் போன்ற பகுதிகளில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் முக்கியச் சாலைகள் மற்றும் கடைகளின் முன் விளம்பரப் போர்டுகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வரப்பெற்றன. அதன்பேரில், தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட பெரியார் பஸ் நிலையத்தில்பயணிளுக்கு இடையூறாக நடைமேடைகளில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள்
, கட்டபொம்மன் சிலையில் இருந்து சேதுபதி பள்ளி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் சாலை, சிம்மக்கல், யானைக்கல், வக்கீல் புதுத்தெரு ஆகிய பகுதிகளில், தீபாவளி பண்டிகைக்காக வைக்கப்பட்ட விளம்பரப் போர்டுகள் மற்றும் சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு பொருள்கள், கடைகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.