Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்              01.11.2010

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

சீர்காழி, நவ.1: நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அன்புச்செழியன், செயல் அலுவலர் தங்கையன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாரதிதாசன் தீர்மானங்களை வாசித்தார்.

கவுன்சிலர் சரவணன் பேசுகையில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதிகளில் பன்றிகள், நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்குவீதியில் சாலைகளில் இரவு நேரங்களில் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் செந்தில்முருகன், எனது வார்டில் உள்ள கைப்பம்பு தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேடான பகுதியில் அமைத்து தர வேண்டும். மூர்த்தி பேசுகையில், எனது வார்டில் ரயில்வே ரோடு செல்லும் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்லும் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் வழியாக கழிவு நீர் உள்ளே சென்று விடுகிறது. உடனடியாக உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

பூங்கோதை பேசுகையில், எனது வார்டில் மின் விளக்குகள் எரியவில்லை. கைப்பம்புகள் செயல்படவில்லை. சுடுகாடு செல்லும் பாதை சேதமடைந்துள்ளது என்றார். நாடி ராஜேந்திரன் பேசுகையில், எனது வார்டில் உள்ள ஆடுகள் மாடுகள் அடைக்கும் பட்டி செயல்படாமல் உள்ளது. இதனை செயல்படுத்த வேண்டும். அல்லது கழிப்பறைகள் கட்டி தர வேண்டும் என்றார். கவுன்சிலர் சரசா பேசுகையில், கொத்த தெருவில் கைப்பம்பு அடித்து தரவேண்டும். பொதுமக்கள் குப்பைகளை கொட்ட குப்பைத்தொட்டி வைக்கவேண்டும் என்றார். துணைத்தலைவர் அன்புச்செழியன், இரட்டை பிள்ளையார் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கொட்டகை போடப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோவிந்தராஜன் பேசுகையில், எனது வார்டில் எரியாத மின் விளக்குகள், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் ராஜேந்திரன், எனது வார்டில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது என்றார். பேருராட்சி தலைவர் மோகன் ராஜ், நாய் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதிய நிதி வந்தவுடன் சாலைகள், மின்விளக்குகள் சரிசெய்யப்படும். பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

 

ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையான நகரமாக கல்யாண் மாற்றப்படும்

Print PDF

தினகரன்               28.10.2010

ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையான நகரமாக கல்யாண் மாற்றப்படும்

டோம்பிவலி, அக். 28: ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி, வரலாற்று முக்கியத்துவம் வாயந்த கல்யாண்&டோம்பிவலியை தூய்மையான நகரமாக மாற்றுவோம் என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சி தேர்தல் வரும் 31ம் தேதியன்று நடக்கிறது. நாளை பிரசாரம் முடிவடைவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரசாரத்துக்காக டோம்பிவலியில் முகாமிட்டிருக்கும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், வரலாற்று சிறப்பு மிக்க கல்யாண்&டோம்பிவலியில் தற்போது இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மையான நகரமாக மாற்றப்படும். இந்நகரம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதிருக்கிறது. ஆனாலும், கல்யாண்&டோம்பிவலியை ஒரு நல்ல நகரமாக மாற்ற வேண்டிய பணிகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இதற்காக, மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வரும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும். எங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளையும் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால் அந்த பிரச்னைகளுக்கு இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. நாங்கள் எங்கள் வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் கட்சி வெற்றி பெற்றால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மும்பைக்கு அடுத்தப்படியாக தானே மாவட்டத்தில்தான் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 14 லட்சம் வெளி மாநிலத்தவர்கள் தானே மாவட்டத்தில் குடியேறியிருக்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை நான் முதலில் விமர்சிக்கவில்லை. அவர் எழுப்பிய கேள்விகளுக்குத்தான் நான் பதில் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

குன்னூரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் நகராட்சி தலைவர் உறுதி

Print PDF

தினகரன்                 28.10.2010

குன்னூரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் நகராட்சி தலைவர் உறுதி

குன்னூர், அக்.28: நகரிலுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமை யாக அகற்றப்படும் என்று மாதாந்திர கூட்டத்தில் நகராட்சி தலைவர் உறுதி அளித்தார். குன்னூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம்

சத்தார்(அதிமுக): மார்க் கெட் பகுதியில் நடைபாதை குண்டும், குழியுமாக உள்ளது. பார்க்கிங் வசதியின்றி வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். இதற்கு நகராட்சி நடவடிக்கை என்ன?

தலைவர்: மார்க்கெட் பகுதியில் இண்டர்லாக் கற்கள் பதித்து நடைபாதை அமைக்கும் திட்டம் விரைவில் துவங்கும். பார்க்கிங் வசதி ஏற்படுத்த கணேஷ் தியேட்டர் அருகே இடம் பார்க்கபட்டுள்ளது.

அனீபா(முஸ்லிம் லீக்): மார்க்கெட் வியாபாரிகள் கடை உரிமத்தை புதுப்பிக்க பணம் கட்டியும் உத்தரவு கிடைக்க பெறவில்லை.

தலைவர்: அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயராம்(அதிமுக): குன்னூர் நகரில் எத்தனை பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.நகர், வேளாங்கண்ணி நகர் பகுதியில் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுப்பது எப்போது?.

நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாததால் அலுவலக பணியில் குளறுபடி ஏற்படுகிறது. பொறியாளரும் முறையாக பணி மேற்கொள்வதில்லை. வி.பி தெரு ஓடை மீது மேல்தளம் அமைக்கும் பணி என்ன ஆனது.

ஆப்பிள் பி குடிநீர் திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக வரும் கூட்டத்தில் நான் பேச மாட்டேன்.

தலைவர்: நகர பகுதியில் சித்தி விநாயகர் தெரு கிராமத்தில் 59 மின் இணைப்பும், அம்பேத்கர் நகரில் 20 இணைப்பும், ராஜாஜி நகரில் 60 இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எம்.ஜி.ஆர் நகர், வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய பின்னர் தான் குடியிருப்புகள் கட்டி கொடுக்க முடியும். நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தாலும் அலுவலக பணியில் பாதிப்பு இல்லை. புதிய கமிஷனர் 15 நாட்களில் நியமிக்கப்படுவர்.

விபி தெரு ஓடை மீது பார்க்கிங் வசதிக்காக மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கீழ்பகுதியில் கற்கள் அதிகளிவில் இருப்பதால் பைல் பவுண்டேஷன் முறையில் மேல் தளம் அமைக்கப்படும்.

ஆப்பிள் பி பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. தீபாவளி முடிந்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும்.

சேகர்(அதிமுக): நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் குன்னூர் கிளப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த ஊழியர்கள் குப்பை சேகரிக்க வராததால் இப்பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மாதந்தோறும் இவர்களுக்கு உரிய தொகையை நகராட்சி வழங்கி வருகிறது. பணிகளையும் நகராட்சி கண்காணிக்க வேண்டும். அல்லது டெண்டரை ரத்து செய்து வேறு நபருக்கு வழங்க வேண்டும்.

தலைவர்: இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரரருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு 2 நாட்களில் சரி செய்யப்படும்.

சையது முபாரக் (அதிமுக): 8,9,18 வார்டுக்கு செல்லும் இணைப்பு பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பருவ மழையில் பாலம் சேதம் அடையும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்படும். மாடல் ஹவுஸ் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

தலைவர்: நாளை 3 வார்டு கவுன்சிலர்களுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கின்றனர்.

இதனால் குரங்குகள் தொல்லை குறைய வாய்ப்புள்ளது. எனவே அதன் பின் நடவடிக்கை எடுக்கப் படும்.

செல்வம்(திமுக): நகர பகுதியில் சமீபத்தில் போடப்பட்ட தெரு விளக்குகள் 2 நாட்களில் வெடித்து சிதறியது. பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்துள்ளளது.

தலைவர்: அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்க்க வேண்டும்.

சார்லி(திமுக): நகர பகுதியில் வசதி படைத்தவர்கள் சிலர் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்ரமித்து வியாபார நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டிடிகே சாலையில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய நகராட்சியின் 5 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை என்ன?.

தலைவர்: நகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்று கொள்ள முடியாது.

ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்றார்.

 


Page 55 of 204