Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 21.10.2010

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, அக்.21: தூத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தேவர்புரம் ரோடு பகுதியில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆய்வாளர்கள் காந்திமதி, நாகராஜன். ஆறுமுகம் மற் றும் அதிகாரிகள் தலைமை யில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தேவர்புரம் ரோட்டில் உள்ள ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு பழக்கடை, குடிசை மற்றும் மாட்டு தொழுவம் ஆகியவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் மத்தியபாகம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

 

 

தூத்துக்குடியில் நடைபாதை ஆக்கிரமிப்பில் 3,973 வழிபாட்டு ஸ்தலங்கள்

Print PDF

தினகரன் 20.10.2010

தூத்துக்குடியில் நடைபாதை ஆக்கிரமிப்பில் 3,973 வழிபாட்டு ஸ்தலங்கள்

தூத்துக்குடி, அக்.20: தூத்துக்குடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதைகளில் 3,973 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி நகர பகுதியில் ஆங்காங்கு சாலைகளை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அதிகாரிகள் அவற்றை அகற்றாமல் காலம் கடத்தி வருகின்றனர். வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி சில வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் தப்பித்து கொள்கின்றனர்.

எனவே சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றவேண்டுமென்பதில் நீதிமன்றமும் உறுதியாக உள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் கதர்வாரிய உறுப்பினருமான பாலகிருஷ்ணன் என்பவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிவிக்குமாறு மனு அளித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுப்படி எத்தனை வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதையும் தூத்துக்கடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதையில் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் விபரங்களையும் தெரிவிக்குமாறு தகவல்கேட்டார். அதற்கு மாவட்ட பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதிலில்,

தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிந்தது இதற்கிடையே தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் கதர்வாரிய உறுப்பினருமான பாலகிருஷ்ணன் என்பவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிவிக்குமாறு மனு அளித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுப்படி எத்தனை வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதையும் தூத்துக்கடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதையில் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் விபரங்களையும் தெரிவிக்குமாறு தகவல்கேட்டார். அதற்கு மாவட்ட பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதிலில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி 2 இந்து கோயில்களும், ஒரு கிறிஸ்தவ ஆலயமும் அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதையில் 3,571 கோவில்களும், 266 சர்ச்சுகளும், 54 மசூதிகளும், மற்றவை 82 உட்பட 3,973 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெண்ணாடத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன் 18.10.2010

பெண்ணாடத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

திட்டக்குடி,அக்.18: உயர்நீதிமன்ற உத்தரவுபடி பேரூராட்சி பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெண்ணாடம் பேரூராட்சியில் பழைய பேருந்து நிலையம் அருகே நெடுஞ் சாலையையும், கோட்டை மதில் தெருவையும் இணைக்கும் பேரூராட்சிக்கு சொந்தமான பாதையும் உள்ளது. இந்த பாதையையொட்டி வடிகால் வாய்க்காலும் உள்ளன. இந்த பாதையை இப்பகுதி மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் அந்த பாதை அவருக்கு சொந்தமானது என்ற உரிமை கொண்டாடி பேரூராட்சியில் எந்த அனுமதி யும் பெறாமல் பாதை யையும், வடிகாலையும் மறித்து ஆக்கிரமித்து கட்டி டம் கட்டி னார். இதை இப் பகுதி மக் கள் ஆட்சேபணை செய்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரூராட்சி நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கணபதிக்கு நோட் டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸ் அடிப்படையில் குறிப்பிட்ட சுவற்றை இடிக்க கூடாது எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் கணபதி வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன் றம் உரிய விசாரணை நடத்தி பேரூராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும், பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும்படியும் இதற்கான செலவுத்தொகை ரூ 20ஆயிரம் கணபதியிடம் வசூலிக்கும் படியும் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து கடலூர் பேரூராட்சி துணை இயக்குநர் சடையப்பன் தலைமை யில் ஆக்கிரமிப்பு பகுதிகளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் துணை தாசில்தார் மகாராணி, வருவாய் ஆய் வாளர் விருத்தகிரி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம், உட்பட வருவாய் துறை, பேரூராட்சி அலுவலர்கள், போலீசார் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் டி.எஸ்.பி. குப்புசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், திருமால் ஆகியோர் உட்பட விருத்தாசலம் உட்கோட்ட சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சுமார் 30 பேர் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 


Page 58 of 204