Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நாகர்கோவிலில் ஓடை புறம்போக்கில் ஆக்ரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன் 05.10.2010

நாகர்கோவிலில் ஓடை புறம்போக்கில் ஆக்ரமிப்பு அகற்றம்

நாகர்கோவில், அக். 5: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கில் ஆக்ரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. நாகர்கோவிலில் முக்கிய பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடங் கள் ஆக்ரமிப்பில் உள்ளன. டதி பள்ளி எதிர்புறம் சுமார் அரை கீ.மீதூரம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சிக்கி இருந் தது. இப்பகுதியில் ஆக்ரமிப்புகளை அகற்ற அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால் மோகன், நுகர்வோர் பாது காப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் உற்பட பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திலும் இது பற்றி பேசப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் நீர் நிலை களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஆக்ரமிப்பு இடங்களை மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி வருவாய்த்துறை, பொது பணித்துறை நீர்வள ஆதாரபிரிவு மற்றும் நகராட்சி அதிகாரிகள் அடையாளப்படுத்தினர். நேற்று முன் தினம் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சிலர் தாங்களாகவே ஆக்ரமிப்புகளை அகற்றினர். அகற்றப்படாத பகுதிகளை நேற்று காலை தாசில்தார் நாகராஜன் பொதுபணித்துறை (நீர்வள ஆதாரபிரிவு) உதவி செயற்பொறியாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் அகற்றினர். இதில் 11 வீடுகள் மற்றும் 2 கட்டிடங்கள் அகற்றப்பட்டது.

 

தனியார் ஹோட்டலிடம் 50 கோடி நிலம் மீட்பு

Print PDF

தினமணி 04.10.2010

தனியார் ஹோட்டலிடம் 50 கோடி நிலம் மீட்பு

தேனாம்பேட்டையில் ஹோட்டலின் வசமிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை பார்வையிடுகிறார் மேயர் மா. சுப்பிரமணியன். உடன் மாநகராட்சி

சென்னை, அக். 3: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலிடம் இருந்து 50 கோடி மதிப்புள்ள எட்டரை கிரவுண்ட் நிலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

இந்த நிலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பூங்கா அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அயாத் என்ற தனியார் ஹோட்டலிடமிருந்து மாநகராட்சிக்கு சொந்தமான எட்டரை கிரவுண்ட் நிலத்தை மீட்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நிலங்கள் பல தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

கடந்த வாரத்தில் எம்.சி.ஆர். நகர், அடையாறு, திருவான்மியூர், ராஜா அண்ணாமலைபுரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 26 இடங்களில் சுமார் 300 கோடி மதிப்பிலான நிலங்கள் மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தியாகராய நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலங்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) மாநகராட்சியால் ஒரே நாளில் மீட்கப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 200 கோடி ஆகும்.

இந்த நிலையில், தேனாம்பேட்டையில் மாநகராட்சி கையகப்படுத்தியுள்ள 50 கோடி மதிப்பிலான எட்டரை கிரவுண்ட் நிலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பூங்கா அமைக்கப்படும்.

மேலும், சென்னை அண்ணாநகர், அயனாவரம் ஆகிய மண்டலங்களில் உள்ள தனியார் வசமிருக்கும் சென்னை மாநகராட்சிக்குச்

சொந்தமான இடங்களை மீட்பது குறித்த ஆய்வில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த பணி நிறைவடைந்ததும் அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும்.

மழைக்கால நடவடிக்கைகள்: சென்னையில் உள்ள தாழ்வானப் பகுதிகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் மழைநீரை அப்புறப்படுத்த 100 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மழைநீர் வடிகால்வாய்கள் 600 கிலோமீட்டர் நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளன என்றார் அவர். மாநகராட்சி ஆணையாளர் தா. கார்த்திகேயன், மன்ற உறுப்பினர் கிறிஸ்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

காலியாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Print PDF

தினமணி 04.10.2010

காலியாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

போடி, ஜூலை 3: போடி நகராட்சி காலனியில் கொலை நடந்த பகுதியில் சமூக விரோதிகள் பதுங்கும் இடமாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

போடி நகராட்சி காலனியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஈஸ்வரன், சுப்பையா ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை போலீஸôர் தேடியதில், நகராட்சி காலனியில் காலியாக இருந்த வீடுகளில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

நகராட்சி காலனியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட பல வீடுகளில் ஆட்கள் வசிக்காமல் காலியாக இருந்தன.

இந்த வீடுகளில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக போலீஸôருக்குத் தெரியவந்தது. இதன்பேரில் போலீஸôர் இந்த வீடுகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில், சனிக்கிழமை இந்த வீடுகளை அப்புறப்படுத்த நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆள்கள் குடியிருக்காமல் காலியாக உள்ள வீடுகள், குடிசைகள், ரோடுகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் ரோடுகளில் உள்ள மண் மேடுகளும் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. அப்போது, மின்கம்பம் ஒன்று சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளையும் அகற்றி விடுவார்கள் எனக்கருதி, நகராட்சி ஆணையரையும், ஜேசிபி வாகனத்தையும் முற்றுகையிட்டனர்.

நகராட்சி ஆணையர் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் பொதுமக்களிடம், குடியிருப்பு வீடுகளை இடிக்கவில்லை என்றும் ஆக்கிரமிப்பு குடிசைகளை மட்டும் அப்புறப்படுத்துவதாகக் கூறியதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 


Page 60 of 204