Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆரணி புதிய பஸ்நிலையத்தில் தாற்காலிகமாக உள்ள பழக்கடைகளை அகற்ற கோரிக்கை

Print PDF

தினமணி 24.09.2010

ஆரணி புதிய பஸ்நிலையத்தில் தாற்காலிகமாக உள்ள பழக்கடைகளை அகற்ற கோரிக்கை

ஆரணி, செப். 23: ஆரணி புதிய பஸ்நிலையத்தில் தாற்காலிகமாக அமைக்கப்பட்ட பழக்கடைகளை அகற்றக்கோரி பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனு விவரம்: ஆரணி புதிய பஸ்நிலையம் பகுதியில் தெற்கு கோட்டை வீதியில் தாற்காலிகமாக அமைக்கப்பட்ட பழக்கடைகளால் பாதிப்புள்ளாகி இருக்கும் நிரந்தர வியாபாரிகளான நாங்கள் கடந்த 3 மாத காலமாக வியாபாரம் இன்றியும், போதிய வருமானம் இன்றியும் பெரும் பாதிப்புள்ளாகி உள்ளோம்.

ஆரணி காந்திரோடில் சிமெண்ட் சாலை போடும் பணி காரணமாக அங்கிருந்த பழக்கடைகளை தாற்காலிகமாக நகராட்சி சார்பில் புதிய பஸ்நிலையம் தெற்கு கோட்டை வீதியில் அமைத்து கொடுத்தனர். இவர்கள் 3 மாத காலம் மட்டும் இங்கு இருப்பர். பின்னர் பழக்கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவோம் என்று நகராட்சி தரப்பில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வியாபாரம் இல்லாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் நகராட்சி முன்பு விரைவில் உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடலூர்&நெல்லிக்குப்பம் சாலையில் பொதுமக்கள் வரவேற்பு

Print PDF

தினகரன் 24.09.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடலூர்&நெல்லிக்குப்பம் சாலையில் பொதுமக்கள் வரவேற்பு

கடலூர், செப். 24: கடலூரில் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கடலூர் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சாலைகளையும், சாலையோரத்தில் பொது மக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்பாளர்கள் கடை கள் நடத்தி வருகின்ற னர். இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்றன.

இந்நிலையில் கடந்த வாரம் இது தொடர்பாக பதில் அளித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவித்தார்.

மேலும் நடைபாதைகள் நடப்பவர்களுக்கு சொந்தம் என்றும் அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடலூர்& சித்தூர் சாலையில் டவுன்ஹால் தொடங்கி நெல்லிக்குப்பம் சாலையில் கோண்டூர் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி னர்.

முன் கூட்டியே அகற்றும்படி தெரிவித்திருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றா மல் இருந்த டீ கடைகள், சிற்றுண்டி உணவகங்கள், பெட்டிக்கடைகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கட்டுமானம் உள்ளிட்ட பொருட் கள் அனைத்தும் பொக் லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறி யாளர் நடனசபாபதி, உதவிபொறியாளர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர்கள் பாபு, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற் றும் நடவடிக்கையின் போது வருவாய்த்துறை, கடலூர் நக ராட்சி, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இன் றும் கடலூர்& சித்தூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை தொடரும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர்& நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகளை பொது மக்கள் வரவேற்றுள்ளனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சாலைகள் விசால மாகவும் போக்குவரத்திற்கு பயனுள்ள விதத்தில் உள்ளதாகவும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு பொது மக்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

 

மாநகராட்சி பகுதியில் ரிசர்வ் சைட்கள் மீட்கப்படுமா?

Print PDF

தினமலர் 24.09.2010

மாநகராட்சி பகுதியில் ரிசர்வ் சைட்கள் மீட்கப்படுமா?

திருப்பூர் : வரும் 2011ல் எட்டு உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, மாநகராட்சி எல்லை விரிவடைய உள்ளது. மேலும், சில உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆலோசனை நடக்கிறது. ஆனால், மக்கள் அடர்த்திக்கு ஏற்ப பூங்காக்கள் இல்லை. மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ரிசர்வ் சைட்கள் ஆக்கிரமிக்கப்படாமல் உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்; அப்பகுதியில் பூங்காக்கள் அமைக்க முயற்சிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் லே-அவுட்களாக மாறி வருகின்றன. விவசாய நிலப்பரப்பை மனையிடமாக மாற்ற, நில உபயோக மாற்றம் செய்ய வேண்டும். பின், லே-அவுட் பிரித்து, ரோடு, ரிசர்வ் சைட் உள்ளிட்ட நடைமுறைகளை தானப்பத்திரம் மூலமாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட லே-அவுட் ஆக இருந்தால், திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெற வேண்டும். உள்ளூர் திட்டக்குழும பகுதிகளை தவிர்த்த பிற பகுதிகளில், கோவை நகர ஊரமைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பரப்பாக இருப்பின், சென்னை நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் (சி.எம்.டி..,) அலுவலகத்தில் அனுமதி தேவை பெற வேண்டும். திருப்பூரில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.அனுமதி பெறப்பட்டு உருவாக்கப்பட்ட லே-அவுட்களிலும், ரிசர்வ் சைட்கள் முறையாக ஒப்படைக்கப்படுவது இல்லை. இரண்டு ஆண்டுக்கு முன், 118 லே-அவுட்கள் திருப்பூர் மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு தற்போதுதான், 40 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரிசர்வ் சைட்கள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்கிறா என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பதில்லை; எத்தனை ரிசர்வ் சைட்கள் உள்ளன என்ற புள்ளிவிவரம் கூட, மாநகராட்சி வசமில்லை. மக்கள் அடர்த்தி நிறைந்த திருப்பூரில் போதிய பூங்காக்கள் இல்லை. விரிவுபடுத்தப்பட உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், பூங்காக்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை. ரோடு விரிவுபடுத்தவோ, பூங்காக்கள் அமைக்கவோ, குழந்தைகள் விளையாட மைதானம் அமைக்கவோ இடமில்லாத சூழலே நிலவுகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

இதில், பூங்காவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாலும், அதற்கு முன், லே-அவுட்களால் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட ரிசர்வ் சைட்களை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு பாதுகாக்க வேண்டும். ரிசர்வ் சைட்கள், ஏமாற்றி விற்கப்பட்டு இருக்கவும், பெரும்பான்மையான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கவும் வாய்ப்பு அதிகம். திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க லட்சக்கணக்கான மரங்கள் தேவை. ஏற்கனவே மரங்கள் இல்லாவிட்டாலும், தற்போது புதிதாக நட முன்வரலாம். அதற்காக, ரிசர்வ் சைட்கள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம். ரிசர்வ் சைட்களையும், மாஸ்டர் பிளானில் உள்ள திட்டச்சாலை, இணைப்புச்சாலை இடங்களையும் மீட்க வேண்டும். அவற்றில் ரோடுகள் மற்றும் பூங்காக்களை அமைக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்.

 


Page 62 of 204