Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நகரை அழகுபடுத்த நாளை மறுநாள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

Print PDF

தினகரன் 23.09.2010

நகரை அழகுபடுத்த நாளை மறுநாள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

பண்ருட்டி, செப். 23: நகரை அழகுபடுத்த நாளை மறுநாள் பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி துவங்கப்படும் என நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிதம்பரம், வடலூர், விருத்தாசலம் ஆகிய நகரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகரங்களை அழகுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், தொரப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செல்வம், தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பண்ருட்டி சுந்தரி, கடலூர் நடனசபாபதி, நெல்லிக்குப்பம் நகராட்சி கட்டட ஆய்வாளர் குமரவேல், பி.எஸ்.என்.எல் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும். அண்ணா கிராமம், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும். பண்ருட்டியில் கடலூர், சென்னை, கும்பகோணம், சேலம் மெயின்ரோடு மற்றும் காந்திரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.

ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்ருட்டி பிரதான சாலைகளில் உள்ள சாலையோர பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தால் தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். வரும் 25, 26ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியினரின் தலையீடும் இல்லாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைச்சர் ஆலோசனை பேரில் பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் இல்லாத நகரமாக்க நடவடிக்கை எடுக்க கூறியதையடுத்து தொய்வில்லாமல் பணிகள் நடை பெறும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் என் னென்ன வகையில் அழகுபடுத்தப்படும் என்ற திட்ட அறிக்கையை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் என் னென்ன வகையில் அழகுபடுத்தப்படும் என்ற திட்ட அறிக்கையை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிர மிப்புகளை, தாங்களாகவே அகற்ற முடிவு செய்துள்ளனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம் சப்& இன்ஸ்பெக்டர் அன்பரசு, வருவாய் ஆய்வாளர் பூபாலசந்திரன் உட்பட பலர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தகர்ப்பு ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிரடி

Print PDF

தினகரன் 23.09.2010

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தகர்ப்பு ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிரடி

ஊட்டி, செப். 23: ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் சில கடைகள் கட்டப்பட்டன. அதே பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டினர். இதனால், மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஆக்கிரப்புக்களை அகற்ற பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனால், இந்த கடைகளை அகற்றும்படி வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், கடைக்காரர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் உட்பட சில கடைகளை வருவாய்த் துறை அதிரடியாக அகற்றியது. ஆனால், அதே பகுதியில் உள்ள சில ஆக்கிரமிப்பாளர்கள் கடை களை காலி செய்ய முடியாது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நகராட்சி மற்றும் வாருவாய்த்துறைக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. மேலும், கடந்த 2007ம் ஆண்டே கடைகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், அவர்கள் காலி செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இப்பகுதியில் உள்ள கடைகளை அகற்றுவதில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.75 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணிக்கு இடை யூறாக சில கடைகள் உள்ளதால், அவற்றை அகற்றினால் மட்டுமே பாலம் கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறையிடம் கடைகளை அகற்றி தருமாறு கோரிக்கை வைத்தது.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அப்பகுதியில் உள்ள ஆக்கரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்தது. முதல்கட்டமாக ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்யும் படி உத்தரவிட்டது. எனினும், ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய தொடர்ந்து காலம் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்தனர். அவர்களை அகற்ற விடாமல், கடை வைத்திருந்தவர்கள் முற்றுகையிட்டனர். கடைகளை காலி செய்ய மதியம் ஒரு மணி வரை இரு துறைகளும் அவகாசம் அளித்தது. இதனை தொடர்ந்து சிலர் கடைகளை காலி செய்தனர். சிலர் காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

ஆனால், மதியம் ஒரு மணிக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் பணி துவங்கியது. நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிரடியாக களத்தில் இறங்கியவுடன் அங்கு கடை வைத்துள்ளவர்கள் கடைகளை காலி செய்யத்துவங்கினர். மாலை 4 மணிக்குள் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அனைத் தும் இடித்து தள்ளப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை மூலம் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டு மான பணிக்கு இருந்த இடையூறு நீங்கியதால் விரைவில் பாலம் கட்டும் பணி முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக மத்திய பஸ் நிலையம் முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் இப்போது மத்திய பஸ் நிலையம் `பளிச்` என இருக்கிறது.

 

ஆக்கிரமிப்பை அகற்றிய கிராமத்தினர்

Print PDF

தினகரன் 23.09.2010

ஆக்கிரமிப்பை அகற்றிய கிராமத்தினர்

பெ.நா.பாளையம்,செப்.23: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் இந்த ஆண்டுஅண்ணாமறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.77 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 4,5,9 ஆகிய வார்டுகளில் கான்கிரீட் மற்றும் தார் சாலைகள் அமைக்க ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4வது வார்டில் சாரங்க நகரில் இருந்து திருமலைநாயக்கன்பாளையம் வரையுள்ள சாலை தார்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த ரோடு ஓரத்தில் இருபுறமும் ஆக்கிரமித்து வீடுகளின் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, செயல் அலுவலர் கல்யாண சுந்தரம், கவுன்சிலர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக சர்வே எடுத்தனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து 5,9 வது வார்டிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இல்லையேல் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றி அதற்குரிய செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்க வசதியாக சர்வே எடுக்கப்பட்டது.

 


Page 63 of 204