Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கட்சி கொடிகள் நட்டு நகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு : அதிகாரிகளுக்கு கெடு

Print PDF

தினமலர் 22.09.2010

கட்சி கொடிகள் நட்டு நகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு : அதிகாரிகளுக்கு கெடு

மேட்டூர்: காலி நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக பொதுமக்கள் நட்டு வைத்த கொடிகம்பங்களை, மேட்டூர் நகராட்சி அதிகாரிகளுக்கு கெடு விதித்து அப்பகுதி மக்கள் அகற்றினர்.மேட்டூர் 15வது வார்டில் நகராட்சி ஆய்வு மாளிகை உள்ளது. அதன் அருகே நகராட்சிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் காலி நிலம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது.நேற்றுமுன்தினம் அப்பகுதி பொதுமக்கள் தாங்கள் சார்ந்துள்ள தி.மு..,- பா...,- வி.சி.,- .தி.மு.., கட்சிகளின் கொடிகளை ஆங்காங்கே நட்டு வைத்து காலி நிலத்தை போட்டி போட்டு ஆக்கிரமித்தனர். தகவல் அறிந்த மேட்டூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சந்திரசேகரன் காலி நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள கொடிகம்பங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் தனசேகரன், நகர அமைப்பு ஆய்வர் திலகவதி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.மேட்டூர் 15வது வார்டு கழிப்பிடம் அருகே தனிநபர் ஒருவர் காலி நிலத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளார். அந்த குடிசைகளை அகற்ற வேண்டும். ஆய்வு மாளிகை அருகிலுள்ள காலி நிலத்தை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவற்றை அகற்றினால் மட்டுமே கட்சி கொடிகளை அகற்றுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, முதல்கட்டமாக 15வது வார்டில் ஆறுமுகம் என்பவர் நகராட்சி நிலத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டிய குடிசையை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். விரைவில் மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.அததூ தொடர்ந்து விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் மீண்டும் கட்சி கொடிகளை நட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோம் என நகராட்சி அதிகாரிகளுக்கு கெடு விதித்து அப்பகுதி பொதுமக்கள் தாங்கள் நட்டு வைத்த கொடிகளை அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 21.09.2010

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்பு

கொடுங்கையூர் : மாநகராட்சிக்கு சொந்தமான, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறரை கிரவுண்டு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கொடுங்கையூர் சின்னான்டி மடம் அருகில் உள்ள தென்றல்நகர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தெருக்களில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஆறரை கிரவுண்டு நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இங்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்தனர். அங்கு சிறிய சிறிய அளவில் குடிசைகள் கட்டி கூலித் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டனர். இதற்காக மாதம் 500 ரூபாய் வாடகையும், 3,000 ரூபாய் வரை முன்பணமும் அவர்கள் பெற்றிருந்தனர். இந்த இடம் தொடர்பாக நடந்துவந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக கடந்தாண்டு தீர்ப்பு வந்தது.

இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாததால், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து அந்த இடத்தை வாடகைக்குவிட்டு வருமானம் பார்த்து வந்தனர். இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தரப்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் குடிசைகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். மேயர் சுப்ரமணியம், கமிஷனர் ராஜேஷ் லக்கானி உத்தரவின்படி, உதவி செயற்பொறியாளர் ஜார்ஜ் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அங்கு நேற்று சென்றனர். பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் அங்கிருந்த குடிசை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

குடிசைகளில் வாடகைக்கு தங்கி இருந்த கூலித்தொழிலாளர்கள் தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அப்போது திடீரென மழை பெய்ததால் ஒதுங்க இடம் கிடைக்காமல் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கொடுத்த முன்பணம் மற்றும் வாடகை பணத்தை திரும்பத் தரும்படிக் கூறி ஆக்கிரமிப்பாளர்களை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க எம்.கே.பி., நகர் உதவி கமிஷனர் பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மீட்கப்பட்ட நிலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க அந்த இடத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி மேயருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Tuesday, 21 September 2010 08:43
 

குடிசை மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட தாராவி பி.எம்.ஜி.பி. காலனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு

Print PDF

தினகரன் 17.09.2010

குடிசை மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட தாராவி பி.எம்.ஜி.பி. காலனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு

தாராவி, செப்.17: தாராவி புனரமைப்பு திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்த குடிசைப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஒரே இடமான பி.எம்.ஜி.பி. காலனி ஏற்கனவே சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தாராவியில் 90 அடி சாலை மற்றும் சயான்& தாராவி லிங்க் ரோடு அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகளுக்காக பி.எம்.ஜி.பி. காலனி கட்டப்பட்டது. இந்த காலனியில் 225 சதுர அடியில் 4,800 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமரின் உதவித்தொகையைக் கொண்டு இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் இங்குள்ள 80 சதவீதம் வீடுகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியமான மஹாடாவட்டாரம் ஒன்று இது பற்றி கூறுகையில், "மஹாடா அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வீட்டு தரகர்கள் சிலர் இந்த காலனியில் உள்ள வீடுகளை ரூ10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர் என்றது.

பெயரை வெளியிட விரும்பாத மஹாடாஉறுப்பினர் ஒருவர் இப்பிரச்னை பற்றி கூறுகையில், "மஹாடாகட்டும் வீடுகள் தற்போது லாட்டரி குலுக்கல் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை விற்பனை செய்வதற்கு தரகர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் மஹாடாஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் அதன் புழக்கடையிலேயே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளனÓ என்றார். ‘மஹாடாவின் விஜிலன்ஸ் இலாகாவுக்கு இந்த முறைகேடு பற்றி தெரியாது என கூறப்படுகிறது. ஆனால், பி.எம்.ஜி.பி. காலனி உட்பட மஹாடாவின் பல டிரான்சிட் கேம்ப்களில் இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடந்து வருவதை அதன் பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 1985ம் ஆண்டு மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி தாராவியில் பாத யாத்திரை மேற்கொண்ட சமயத்தில் தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ100 கோடி உதவித்தொகை அறிவித்தார். இந்த தொகையை கொண்டு பி.எம்.ஜி.பி. காலனி கட்டப்பட்டது. தற்போது மஹாடாவின் உதவித் தலைவராக இருக்கும் கவுதம் சாட்டர்ஜி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கேற்றார். இன்னும்கூட அவர் மஹாடாதலைவர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில், அவரிடம் பணியாற்றும் அதிகாரிகளோ இது போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

 


Page 64 of 204