Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தி.பூண்டி கோர்ட் முன் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 09.09.2010

தி.பூண்டி கோர்ட் முன் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் மற்றும் உழவர் சந்தை அருகே இருந்த ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டன.

திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் முன் சிறுகடை வைத்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், நீதிமன்றத்துக்கு வரவும் இடையூறாக இருந்த கடைகளை உரிமையியல் நீதிபதி நாகராஜன் உத்தரவுப்படி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திராவிடமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீஸார், நகராட்சி ஊழியர்கள் சேர்ந்து நீதிமன்றம் முன்பாக இருந்த ஆக்ரமிப்புக்களை அகற்றினர்.

அவற்றை நகராட்சியின் லாரியில் ஏற்றிச் சென்றனர். உழவர் சந்தை எதிரே இருந்த ஆக்ரமிப்புக்களையும் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.

 

திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 09.09.2010

திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி, செப். 9: திருவா ரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதிலிருந்தும் வங்கிகள், பள்ளிகள், கோயில் கள் போன்றவற்றைக்கு திருத்துறைப்பூண்டி நகருக்குதான் வரவேண்டும். மேலும் திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் இதன்வழியாகத்தான் செல்லவேண்டும்.

நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்துவருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தினமும் பல மணி நேரம் பொதுமக்கள் தவித்துவருகின்றனர். நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை இணைந்து அடிக்கடி போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றி சில தினங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விடுகின்றன.

இந்நிலையில் கலெக்டர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை சார்பில் நகராட்சி துப் புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திராவிடமணி, காவல் ஆய்வாளர் மதியழகன் ஆகி யோர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற் றது. புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை முன்புறம், கோர்ட் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. நகர பகுதியில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.

 

சோமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன் 09.09.2010

சோமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை

பெங்களூர், செப். 9: பெங்களூர் அல்சூர் சோமேஸ்வரர் கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிரடியாக அகற்றியுள்ளது. அல்சூரிலுள்ள சோமேஸ்வரர் கோயில் பெங்களூரின் பழமையான சிவாலயங்களில் ஒன்றாகும். கடந்த மாதம் திடீரென சோமேஸ்வரர் ஆலயத்திற்கு முதல்வர் எடியூரப்பா சென¢றார். அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட முதல்வர் கோயிலைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை பார்த்து அதிர் ச்சியடைந்தார்.

மாநிலத்திற்கு செழுமை ஏற்பட வேண்டும் என்றால் பழமையான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளதாகவும் மாநிலத்திலுள்ள பழமையான கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அப்போது அறிவித்தார். சோமேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென பிபிஎம்பி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சோமேஸ்வரர் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்தனர். துணை கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை கிரேன்களின் உதவியுடன் பிபிஎம்பி அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதை எதிர்பார்க்காத வர்த்தகர்கள் மாநகராட்சியின¢ நடவடிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் போலீசார் வர்த்தகர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மதியம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. சிறிதும் பெரிதுமாக பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இந்த நடவடிக்கையில் அகற்றப்பட்டன. பெண்கள் கிரேன்களின் முன்பு சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுக்க முயன்றனர். பெண் போலீசார் அவர்களை தூக்கிச் சென்றனர். மதியம் வரை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் மூலம் சுமார் 50 கடைகள் இடித்து தள்ளப்பட்டன. அப்பகுதியில் இனியும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘திடீரென முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை இடித்து தள்ளிவிட்டனர். அதுவும் தற்போது அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் கடைகளை அகற்றியதால் எங்களது வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயிற்றுப்பிழைப்புக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது‘ என்று கடைகளை இழந்த வர்த்தகர்கள் பலர் தெரிவித்தனர்.

 


Page 66 of 204