Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நில மாபியாக்களுக்கு பயப்படாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன்

Print PDF

தினகரன் 26.08.2010

நில மாபியாக்களுக்கு பயப்படாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன்

பெங்களூர், ஆக.26: பெங்களூர் மாநகரில் செயல்படும் நில மாபியாகளுக்கு பயப்படாமல் நில பாதுகாப்பு கொள்கையை செயல்படுத்துவேன் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார். மேயர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நில பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் மேயர் கூறியதாவது: மாநகரில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமித்துள்ளது குறித்து நடத்திய ஆய்வில் மாநகரின் தெற்கு மண்டலத்தில் 40, மேற்கு மண்டலத்தில் 98, கிழக்கு மண்டலத்தில் 62 என்ற வகையில் சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பின்னி மில் பக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் வைத்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய நிலத்தை அந்த நபர் இன்னொருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த நிலத்தை மாநகராட்சிக்கு திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான நிலம், கட்டிடம் ஆகியவை யார் யாரிடத்தில் உள்ளது என்ற ஆய்வு பணி நாளை (இன்று) முதல் நடத்தப்படும். சில நில மாபியாக்கள் அரசு சொத்தை ஆக்ரமித்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நில மாபியாகளுக்கு அஞ்சாமல் சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி முதல்வர் அளிப்பார் என்றார்.

 

ரூ9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Print PDF

தினகரன் 26.08.2010

ரூ9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பெங்களூர், ஆக. 26: பெங்களூர் பொம்மனஹள்ளியின் சர்வே எண் 44/9 மற்றும் 52/4 ஆகியவற்றில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கேரளா ரோட்வேஸ் மற்றும் பட்டேல் ரோட்வேஸ் ஆகிய 2 நிறுவனங்கள் ஆக்கிரமித்து குடோன் அமைத்திருந்தன. இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சர்வேப் பணிமூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெங்களூர் வளர்ச்சி குழும அதிகாரிகள், ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும¢ பணியில¢ ஈடுபட்டனர். போலீஸ் உதவியுடன் பணிகள் நடைபெற்றன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ9 கோடி என்று தெரியவந்துள்ளது.

 

26 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு 2 ஏக்கர் மாநகராட்சி இடம் மீட்பு

Print PDF

தினகரன் 26.08.2010

26 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு 2 ஏக்கர் மாநகராட்சி இடம் மீட்பு

கோவை, ஆக. 26: கோவை யில் 26 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மாநகராட்சி இடம் இரண்டு ஏக்கர் மீட்கப்பட்டது. கோவை மாநகர் 14வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மாநகராட்சிக்கு சொந்த மான 1.91 ஏக்கர் ரிசர்வ் சைட் உள்ளது. அப்பகுதி யில் கடந்த 1984ம் ஆண்டு வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டபோது பொது பயன்பாட்டுக்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டது.

இது, மாநகராட்சி வசம் இருந்தது. இதை, அதே பகுதி யை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரி லும், விநாயகர் கோயில் என்ற பெயரிலும், தென்னந்தோப்பு, மாந்தோப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செ ய்து அனுபவித்து வந்தனர். 20 சென்ட் பரப்பளவில் விநா யகர் கோயில், அதையொ ட்டி மடப்பள்ளி கட்டப்பட்டு மின்வாரியத்திடமிரு ந்து மின் இணைப்பும் பெறப் பட்டுள்ளது. இதை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண் டும் என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குடியிருப் போர் சங்கத்தினருக்கு மாநகராட்சி சார்பில் இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட் டது. ஆனால், எவ்வித பதி லும் இல்லை. இதையடுத்து, அந்த இடத்தை அதிரடியாக மீட்கும்படி ஆக்கிரமிப்பு அகற்றும் குழுவுக்கு மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா உத்தரவிட் டார்.

அதன்படி, இக்குழுவில் இடம்பெற்றுள்ள உதவி நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் சுமார் 25க் கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு புல் டோசர் இயந்திரத்துடன் அதிரடியாக உள்ளே புகுந்தனர். இரும்புகம்பி வேலி, கோயில் மடப்பள்ளி, தென்னந்தோப்பு, மாந்தோப்பு வேலி ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தினர்.

கோயிலை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் அதை மட்டும் அப்புறப்படுத்தவில்லை. இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா நேற்று ஒரு மணி நேரம் நேரில் பார்வையிட்டார்.

இதுபற்றி அன்சுல் மிஸ் ரா கூறுகையில், ‘‘மாநகராட்சி ரிசர்வ் சைட் 1.91 ஏக்கர் கடந்த 26 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கொடுத்த அவகாசத்தை பயன்படுத்தி அவர் களாக அப்புறப்படுத்திக்கொள்ளவில்லை. அதனால், அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படும் என்பதால் அதை சேதப்படுத்தவில் லை. மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.15 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படும். மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டி யும் கட்டப்படும்.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் 611 இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ரிசர்வ் சைட் உள் ளது. இவற்றில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரிசர்வ் சைட்கள் 99 சதவீதம் மீட்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள ரிசர்வ் சைட் களும் படிப்படியாக மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்’’ என்றார்.

 


Page 70 of 204