தினமலர் 19.08.2010
கம்பம் நகருக்குள் ஆக்கிரமிப்பு
கம்பம்: கம்பம் நகருக்குள் தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் சர்வே பணிகளை தொடங்கி உள்ளது.கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. மெயின்ரோடு மட்டுமின்றி, வேலப்பர் கோயில் வீதி, கம்பமெட்டு வீதி, காமயகவுண்டன்பட்டி ரோடு விலக்கு, காந்திசிலை, தியாகிவெங்கடாசலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு, காந்திஜிவீதி உட்பட பல வீதிகளில் நெருக்கடி காணப்படுகிறது.பல தெருக்களில் தெருக் களை ஆக்கிரமித்து படிக் கட்டுகள், பாத்ரூம்கள் அமைத்துள்ளனர். பெரிய வீதிகள் கூட சுருங்கி, சின்ன சந்துகளாக மாறி வருகின்றன.தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து தற்போது நகரமைப்பு அலுவலர் தங்கராஜ் தலைமையில் அலுவலர்கள் குழு, சர்வே செய்து வருகிறது. மீட்கப்பட வேண்டிய பகுதிகள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.