Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கம்பம் நகருக்குள் ஆக்கிரமிப்பு

Print PDF

தினமலர் 19.08.2010

கம்பம் நகருக்குள் ஆக்கிரமிப்பு

கம்பம்: கம்பம் நகருக்குள் தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் சர்வே பணிகளை தொடங்கி உள்ளது.கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. மெயின்ரோடு மட்டுமின்றி, வேலப்பர் கோயில் வீதி, கம்பமெட்டு வீதி, காமயகவுண்டன்பட்டி ரோடு விலக்கு, காந்திசிலை, தியாகிவெங்கடாசலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு, காந்திஜிவீதி உட்பட பல வீதிகளில் நெருக்கடி காணப்படுகிறது.பல தெருக்களில் தெருக் களை ஆக்கிரமித்து படிக் கட்டுகள், பாத்ரூம்கள் அமைத்துள்ளனர். பெரிய வீதிகள் கூட சுருங்கி, சின்ன சந்துகளாக மாறி வருகின்றன.தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து தற்போது நகரமைப்பு அலுவலர் தங்கராஜ் தலைமையில் அலுவலர்கள் குழு, சர்வே செய்து வருகிறது. மீட்கப்பட வேண்டிய பகுதிகள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 19 August 2010 08:32
 

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் பிளாட்பார கடைகளை அகற்ற கோரிக்கை

Print PDF

தினகரன் 18.08.2010

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் பிளாட்பார கடைகளை அகற்ற கோரிக்கை

வாலாஜாபாத், ஆக 18: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம். செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலையம் அருகே ரயில் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இருப்பதால் இந்தப் பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பஸ் நிலைய பிளாட்பாரத்தில் ஏராளமான சிறுகடைகள் முளைத்துள்ளன. பயணிகள் வெயிலில் நிற்கின்றனர். சிறு வியாபாரிகள் ஆங்காங்கே உட்கார்ந்திருப்பதால், பஸ் வரும்போது பயணிகள்சிரமப்படுகின்றனர். பிளாட்பாரத்தில் உள்ள கடைகளின் மீது விழுகின்றனர். இதனால் பயணிகளுக்கும் பிளாட்பார கடை நடத்துபவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பார கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மைசூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு

Print PDF

தினகரன் 13.08.2010

மைசூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு

மைசூர், ஆக.13: மைசூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. மைசூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிதிமீறல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம், கடந்த ஞாயிற்றுகிழமை துவக்கியது. சட்டவிதிமீறல் கட்டிட இடிப்புப்பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துள்ளது. மைசூரில் மேற்குபகுதியில் அமைந்துள்ள 4.5 கிமீ நீளமுள்ள பூர்னையா கால்வாய் வட்டாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. போகடி இரண்டாவது ஸ்டேஜ் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருந்த சட்டவிதிமீறல் கட்டிடங்களை ஜே.சி.பி.மெஷின் துணையுடன் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் இடித்துதள்ளினர். 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இதை கண்டித்து கவுன்சிலர் புஷ்பலதா, முன்னாள் மேயர் டி.பி.சிக்கண்ணா போராட்டம் நடத்தினர். இடிக்கப்படும் வீடுகளில் வசிப்போர் ஏழைகள் என்பதால், பணியை நிறுத்துமாறு பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வீடுகளை உடனடியாக காலி செய்ய இரண்டு நாட்கள் அனுமதி அளிப்பதாக உதவி கலெக்டர் பாரதி தெரிவித்தார். ஹரலையா பகுதியில் அரை ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தென்னந்தோப்பு வெட்டப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நிலத்தை சுற்றி போடப்பட்டிருந்த வேலியும் அகற்றப்பட்டது. சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து மனைபோட்டு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் பாரதி தெரிவித்தார்.

 


Page 74 of 204