Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

செங்கல்பட்டில் 2வது நாளாக 200 கடைகள் இடிப்பு

Print PDF

தினகரன் 11.08.2010

செங்கல்பட்டில் 2வது நாளாக 200 கடைகள் இடிப்பு

செங்கல்பட்டு, ஆக. 11: செங்கல்பட்டு நகரில் ஆக்கிரமித்துள்ள கடைகளை இடிக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது, ராஜாஜி பஜாரில் துணிக்கடை, ஓட்டல், டீக்கடை, மிட்டாய் கடை என 200க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று இடித்து தள்ளினர்.

அறிவிப்பு இல்லாமல் கடைகளை எப்படி இடிக்கலாம் என சிலர் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மறியல் செய்ய தயாரானார்கள். ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்க அனுமதி பெற தேவையில்லை. மறியல் செய்தால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். மேட்டுத்தெரு, மார்க்கெட், ஐரோடு ஆகிய பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்படும் என நகராட்சி அறிவித்துள்ளது.

 

திருமுல்லைவாயலில் ஆக்கிரமிப்பு வீடு கடைகள் இடிப்பு

Print PDF

தினகரன் 11.08.2010

திருமுல்லைவாயலில் ஆக்கிரமிப்பு வீடு கடைகள் இடிப்பு

ஆவடி, ஆக. 11: திருமுல்லைவாயல் குளக்கரை சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கோயில் கட்டப்பட்டிருந்தன. இதனால், இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர்.

இது குறித்து, ஆவடி நகராட்சி கமிஷனர் ராமமூர்த்திக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்படி, நகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர். ஆக்கிரமித்த கடை, வீடுகளை அகற்ற கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

ஆனாலும் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து, நேற்று காலை நகரமைப்பு அதிகாரி முரளி தலைமையில் கட்டிட ஆய்வாளர்கள் வெங்கடேசன், கவிதா, காமதுரை ஆகியோர் அப்பகுதிக்கு வந்தனர்.

2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடை, வீடு, கோயில் உட்பட 45 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆவடி உதவி கமிஷனர் குப்புசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், பால்ராஜ், மாதேஸ்வரன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும்! நகராட்சி திட்டவட்டம்

Print PDF

தினமலர் 11.08.2010

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும்! நகராட்சி திட்டவட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள், நேற்று, முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியதால், பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், நெடுஞ்சாலைத் துறையினர், சாலைகளிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக நோட்டீஸ் அனுப்பி, குறிப்பிட்ட தேதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அதேபோல், நகராட்சியின் முக்கிய சாலைகளான ராஜாஜி சாலை, மேட்டுத்தெரு, பஜார்வீதி, அண்ணாசாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆகஸ்ட் 9ம் தேதி பகல் 2 மணிக்கு அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் கோரினர். இது குறித்து யாருக்கும் முன்னறிவிப்பு செய்யவில்லை.நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு பஸ் நிலையம் நுழைவுச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நேற்று காலை 11 மணிக்கு, நகரமைப்பு ஆய்வாளர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர்சித்திக், பால்டேவிஸ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ராஜாஜி சாலைக்கு ஜே.சி.பி.,யுடன் வந்தனர்.பின், அப்பகுதியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கினர். கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த கடைகள், கடைகளின் மீது அமைக்கப்பட்டிருந்த பந்தல்களை ஜே.சி.பி., மூலம் அகற்றினர். வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தல் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றினர்."முன்பே தகவல் சொல்லியிருந்தால் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றியிருப்போம். முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளி விட்டீர்களே' என வியாபாரிகள் ஆவேசப்பட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதையொட்டி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 76 of 204