தினகரன் 11.08.2010
செங்கல்பட்டில் 2வது நாளாக 200 கடைகள் இடிப்பு
செங்கல்பட்டு, ஆக. 11: செங்கல்பட்டு நகரில் ஆக்கிரமித்துள்ள கடைகளை இடிக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது, ராஜாஜி பஜாரில் துணிக்கடை, ஓட்டல், டீக்கடை, மிட்டாய் கடை என 200க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று இடித்து தள்ளினர்.
அறிவிப்பு இல்லாமல் கடைகளை எப்படி இடிக்கலாம் என சிலர் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மறியல் செய்ய தயாரானார்கள். ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்க அனுமதி பெற தேவையில்லை. மறியல் செய்தால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். மேட்டுத்தெரு, மார்க்கெட், ஐரோடு ஆகிய பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்படும் என நகராட்சி அறிவித்துள்ளது.