Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தர்மபுரியில் சாலையோர காய்கறி கடைகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன் 06.08.2010

தர்மபுரியில் சாலையோர காய்கறி கடைகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

தர்மபுரி, ஆக.6: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் ஆக்ரமித்து அமைக்கப்பட்ட காய்கறி கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர்.

தர்மபுரி முகமது அலி கிளப் ரோடு நகர் பேருந்து நிலையம் எதிரே கடந்த பல ஆண்டுகளாக தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கிவந்தது. இங்கு 247 வியாபாரிகள் கடை வைத்திருந்தனர். சந்தை நடக்கும் இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் முடியும் வரை மாற்று இடத்தில் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கைவிடுத்தனர்.

இதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடைக்கான இடம் ஒதுக்கீடு செய்வதில் தொட ங்கி பல்வேறு பிரச்னைகள் அடுத்தடுத்து நடந்தன. இதற்கிடையே வியாபாரிகள் சிலர், ஏற்கனவே சந்தை நடந்து வந்த பகுதிக்கு அருகே சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்தனர்.

அரசு நிதியில் புதிய சந்தை கட்டிடம் கட்டிய பின்பும், அங்கு சென்று வியாபாரம் செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகள் அனைத்தும் சாலையோரங்களிலேயே நடந்துவந்தன. சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், வியாபாரிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே சாலையோரங்களை ஆக்கிரமித்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ள காய்கறிக் கடைகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சாலையோர கடைகளை அகற்றினர். நகராட்சி ஆணையர் அண்ணாதுரை தலைமையிலான ஊழியர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால், நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இடையூறாக இருந்த வழிபாட்டுத்தலம் அகற்றம்

Print PDF

தினமணி 04.08.2010

இடையூறாக இருந்த வழிபாட்டுத்தலம் அகற்றம்

போடி, ஆக. 3: போடியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டு தலத்தை ஜமாத் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நகராட்சியினர் அகற்றினர்.

போடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவை பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகின்றன. போடி பழைய ஆஸ்பத்திரி தெருவில் பள்ளி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பழைமையான ஆலமரம் இருந்தது. ஆலமரத்தின் அடியில் 100 ஆண்டு பழைமையான இஸ்லாமிய முகைதீன் ஆண்டவர் கோயில் அமைந்திருந்தது.

போடி பகுதியில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் புதிதாக கட்டப்பட்ட நிலையில் இந்த வழிபாட்டுத்தலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆலமரத்தை அகற்றும்போது வழிபாட்டுத்தலம் சேதமடையும் நிலை இருந்தது.

இதனையடுத்து போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் போடி பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார். அதன்பேரில், நகராட்சி மக்களின் நன்மைக்காக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வழிபாட்டுத் தலத்தை அகற்ற ஜமாத் நிர்வாகிகள் ஒத்துழைப்பதாகத் தெரிவித்தனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலர் ஆர்.சம்சுதீன், பொருளாளர் எஸ்.அப்துல்மஜீத், மேலப்பள்ளியைச் சேர்ந்த நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலையில் நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் அதை அகற்றினர்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வழிபாட்டு தலத்தை அகற்ற முன்வந்து ஒத்துழைப்பு அளித்த ஜமாத்தார்களையும், நகராட்சி நிர்வாகத்தினரையும் பொதுமக்கள் பாராட்டினர். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சென்றாயன், தியாகராஜன், சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

குடிசை வீடுகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Print PDF

தினகரன் 04.08.2010

குடிசை வீடுகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மும்பை, ஆக. 4: மும்பை நகரில் உள்ள குடிசை வீடுகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கு மாறு மாநகராட்சி கமிஷன ருக்கு முதல்வர் அசோக் சவான் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மந்த் ராலயாவில் முதல்வர் அசோக் சவான் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், மும்பையில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிர மிப்புகளை அகற்ற தயவு தாட்சண்யம் இன்றி மா நகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட வீட்டு வசதித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

போலீஸ், அரசியல்வாதி கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டணி அமைத்து நகரில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் தோன்ற ஊக்குவித்து வரு வதாக கூறப்படுவதில் உண் மை இருப்பதாக முதல்வர் ஒப்புக் கொண்டதாகவும், குடிசைகள் உள்ளிட்ட சட்ட விரோத ஆக்கிரமிப்பு கள் உருவாவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிக ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியாவுக்கு முதல்வர் உத்தரவிட்ட தாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கூட்டத்தில் முதல்வர் அசோக் சவான் பேசுகையில், "நகரில் புதிதாக குடிசைகள் முளைப்பதை தடுக்க வேண்டியது மிக அவசியம்.

அப்படி தடுப்பதன் மூலம்தான் மும்பையில் சரியான கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும். நகர்ப்புற பகுதிகள் அதிகரித்துக் கொண்டே போவதால், மும்பை நகர கட்ட மைப்புகளுக்கு திட்டம் வகுக்கும் போது புனே, நாசிக் போன்ற நகரங்களையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

மும்பையில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்து வது தொடர் பாக ஆய்வு செய்ய சிங்கப் பூரை சேர்ந்த சபர்பனா கார்பரேஷன்என்ற நிறுவனம் நியமிக்கப் பட்டிருந்தது. இந்த நிறுவனம் நேற்று நடந்த கூட்டத்தின் போது தனது ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித் தது.

 


Page 79 of 204