Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தி.மலை குமரக் கோயில் பகுதியில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்     29.07.2010

தி.மலை குமரக் கோயில் பகுதியில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தி.மலை, ஜூலை 29: திருவண்ணாமலை குமரக்கோயில் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையின் முக்கிய சாலைகளில் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்படுகின்றன. குறிப்பாக, தேரடித் தெரு, சின்னக்கடைத் தெரு, திருமஞ்சன கோபுரத்தெரு போன்ற முக்கிய சாலைகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், இந்த சாலைகள் வழியாக போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது.

சாலையோரங்களில் பல அடி தூரத்துக்கு ஆக்கிரமித்துள்ளதால், சாலையின் அகலம் குறைந்துவிட்டது. மேலும், நடைபாதை கடைகள், சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றால் மேலும் சிக்கல் ஏற்படுகின்றன. இந்நிலையில், நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது.

அதன்தொடக்கமாக, குமரக்கோயில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். நகராட்சித் தலைவர் இரா.திருமகன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும், குமரக்கோயில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கால்வாய்களை மூடிவிட்டு, அதன்மீது கடைகள் வைத்திருந்தனர்.

 

தஞ்சையில் இன்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

Print PDF

தினமணி 29.07.2010

தஞ்சையில் இன்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூர், ஜூலை 28: தஞ்சாவூர் நகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் நகரை மேம்படுத்தவும், பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடு வருகின்றன. இதன் ஒருகட்டமாக, போக்குவரத்து ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்க அமைப்புகளையும் அழைத்து, ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத் தலைநகராகவும், பாரம்பரியச் சுற்றுலா மையமாகவும் விளங்கும் தஞ்சாவூர் சிறப்பான நகரமாகும். இதை அழகுபடுத்துவதும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியதும் அனைவரின் பொறுப்பாகும்.

அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்படும். அகற்றப்படும் பொருள்கள் திரும்பத் தரப்பட மாட்டாது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்கொள்வர். ஆக்கிரமிபபுகள் அகற்றும் பணிக்கு நகரப் பொதுமக்கள், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

நந்தம்பாக்கம், ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Print PDF

தினகரன் 28.07.2010

நந்தம்பாக்கம், ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஆலந்தூர், ஜூலை 28: நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரை அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 19 வீடுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நந்தம்பாக்கம் பேரூராட்சி தலைவர் சேகர், ஆலந்தூர் தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் புல்டோசர் மூலம் கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருங்களத்தூரில் மாற்று இடம் ஒதுக்கி இருப்பதாக பேரூராட்சி தலைவர் சேகர் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில், வருவாய்த்துறை மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. கிண்டி ரேஸ் கோர்சுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த பகுதியில் அங்கு வேலை செய்தவர்களுக்கு வீடுகள் கட்டி இலவசமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இப்பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணி நடக்க உள்ளதால், இந்த வீடுகளை இடிக்கும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது. 45 வீடுகள் இடிக்கப்படுகின்றன.

 


Page 84 of 204