Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விருத்தாசலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அதிரடி

Print PDF

தினகரன் 27.07.2010

விருத்தாசலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அதிரடி

உளுந்தூர்பேட்டை, ஜூலை 27: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள விருத்தாசலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள திருவெண்ணைநல்லூர் ரோடு, சென்னை நெடுஞ்சாலை, விருத்தாசலம் சாலை, திருச்சி நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகளுக்கு முன்பு கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. இதனை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படை யில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பரந்தாமன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் சாலை சென்னை நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இது குறித்து உதவி கோட்ட பொறியாளர் கூறிய போது தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதி யில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற் றிய பிறகு மீண்டும் கொட் டகை போட்டு ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

சாலையோர ஆக்கிரமிப்புகள் நீக்கம்

Print PDF

தினமணி 27.07.2010

சாலையோர ஆக்கிரமிப்புகள் நீக்கம்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 26: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் நீக்கி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட விருத்தாசலம் சாலை, திருவெண்ணெய்நல்லூர் சாலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சேலம் சாலை ஆகியவற்றில் சாலையோர ஆக்கிரமிப்புகளை கடந்த ஒரு வாரமாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பி.பரந்தாமன் தலைமையில் பொறியாளர் கவிதா, சாலை ஆய்வாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் காவல்துறை உதவியுடன் கடந்த ஒரு வாரமாக நீக்கி வருகின்றனர்.

 

மாநகராட்சி பூங்காவிற்குள் வீட்டு சுற்றுச்சுவர் நகரமைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்

Print PDF

தினமலர் 27.07.2010

மாநகராட்சி பூங்காவிற்குள் வீட்டு சுற்றுச்சுவர் நகரமைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்

கோவை:மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டுச்சுற்றுச்சுவரை மாநகராட்சி நகரமைப்பு துறையினர் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.

தடாகம் ரோடு ஏ.கே.எஸ்., நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு திடலும் ஒருங்கிணைந்த பூங்காவும் உள்ளது. இப்பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள, இரண்டு சென்ட் பகுதியை பூங்காவிற்கு அருகே உள்ள வீட்டு உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்து, வீட்டுச்சுற்றுச்சுவரை அமைத்துக் கொண்டார். மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது: பூங்காவிற்கு சொந்தமான இரண்டு சென்ட் இடத்தில் வீட்டுச்சுற்றுவர் கட்டப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரின் ஆவணங்களையும், மாநகராட்சி ஆவணங்களையும் சரிபார்த்த போது, ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டு உரிமையாளரிடம் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டுக்கொடுத்து, சுற்றுச்சுவரை இடித்து அப்புறப்படுத்த பலமுறை மாநகரட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடைசியாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுற்றுச்சுவர் இடிக்கப்படாததால், நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை மாநகராட்சி சிறப்பு அதிரடிப்படையினரை கொண்டு அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று. மாநகராட்சிக்கு சொந்தமான பொது சொத்துக்களை எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம்; பொது சொத்து தனி நபருக்கு சொந்தமாகாது. விசாரணை மற்றும் ஆய்வின் போது எப்படியும் பொதுசொத்து குறித்த தகவல் தெரிந்து விடும். இது போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.

 


Page 86 of 204