Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 27.07.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் கேட் கடை பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பெருமளவில் ஆக்கிரமிப்பு இருந்தது. பாலமேடு சாலையில் சிலர் மரக்கடை மற்றும் ஓட்டல் வைத்து ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல முறை தகவல் தெரிவித்தனர். யாரும் முன் வரவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் சமயநல்லூர் டி.எஸ்.பி., உத்தரவின் பேரில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைவர் அழகு உமாதேவி, இன்ஸ்பெக்டர் பவுன் உட்பட போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றினர்.

 

கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டடத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி

Print PDF

தினமலர் 27.07.2010

கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டடத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டட முகப்பு இடிக்கப்பட்டு, புதிய வடிவில் கடையொன்று கட்டப்பட்டு வருகிறது. இதை, மற்ற வியாபாரி களும் கடைபிடிக்க நேரிட் டால், மார்க்கெட்டின் முகப்புத் தோற்றம் மறைந்து அலங்கோலமாக மாறும் அபாய நிலை உருவாகும்.

காய்கறி, பழம், பூக்களை மொத்த வியாபாரம் செய்வதற்காக கோயம் பேடு மார்க்கெட் திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, கோயம்பேடு பகுதியில் 295 ஏக்கர் பரப்பளவில், மார்க் கெட்டிற்குள் கட்டப்படும் கடைகளின் முகப்புத் தோற்றமும் கூரை வடிவில், ஒரே மாதிரியாக இருக்கும் படி வரைபடம் தயார் செய்யப்பட்டது. குறிப்பாக, காய்கறி மற்றும் பழக்கடைகளின் முகப்புத் தோற்றம் கூரை போன்ற அமைப்பு டனும், பூ மார்க்கெட் தனி வடிவ மைப்புடனும் இருக்கும் படி வரைபடம் உருவாக்கப் பட்டது. அந்த வரை படத்தைக் கொண்டு, உலக வங்கியின் உதவியுடன், 2,500க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக் கடைகள் ஒரே மாதிரியான முகப்புத் தோற்றத் துடன் கட்டும் பணி தொடங் கியது.

அக்கடைகள் வியாபாரிகளுக்கு ஏற்றவாறு 150, 172, 325, 600, 1,200, 2,400 சதுர அடிகளில் கட்டப்பட்டு, வியாபாரிகளிடம் குறிப் பிட்ட முன்பணம் பெற்றுக் கொண்டு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. பிரபலமான ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒரு வடிவமைப்பு இருப்பது போல், கோயம்பேடு மார்க்கெட் என்றால், கூரை போன்ற அமைப்பு அனைவரது ஞாபகத்திற்கு வரும். இந் நிலையில், கடைகளின் முகப்புத் தோற்றத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு, வியாபாரிகள் சிலர் தங்களது வசதிக்காக கடை களின் உள் அமைப்புகளில் சிறிது மாற்றம் செய்து கொண்டனர்.

ஆனால், தற்போது பழ மார்க்கெட்டில், "டி' பிளாக் முதல் பேஸ்சில் 600 சதுர அடியில் உள்ள கடை எண் 111 மொத்தமாக இடிக்கப் பட்டு, புதிய வடிவில் கட்டுமான பணி நடக்கிறது. மார்க்கெட்டின் முகப்புத் தோற்றத்தை மாற்றி, மேற்கூரைக்கு பதிலாக, கான்கிரீட் தளம் போடும் பணி முடிந்து, மேலும் சில கட்டுமானப் பணி தொடர்கிறது.

இதனால், ஒரே மாதிரி யாக மார்க்கெட்டிற்குள் இருந்த கடைகளில் இருந்து அக்கடை வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. இது குறித்து மார்க்கெட்டை நிர்வகித்து வரும் எம்.எம்.சி., என்றழைக்கப் படும் அங்காடி நிர்வாக குழு(மார்க்கெட் மெயின்ட னன்ஸ் கமிட்டி) மற்றும் சென்னை பெருநகர் வளர்ச் சிக் குழும அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இதனால், மற்ற வியாபாரிகளும் கடைகளை இடித்துவிட்டு, தங்களது இஷ்டம் போல் புதிய வடிவில் கடைகளை கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட் கடைகளின் ஒருமித்த தோற்றம் மறைந்து, அலங் கோலமாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் 166 ஹெக்டேர் அரசு நிலங்கள் மீட்பதில் அதிகாரிகள் சுணக்கம்

Print PDF

தினகரன் 26.07.2010

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் 166 ஹெக்டேர் அரசு நிலங்கள் மீட்பதில் அதிகாரிகள் சுணக்கம்

விருதுநகர், ஜூலை 26: விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஆயிரத்து 648 ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் திணறி வருகின்றனர். சரியான அணுகுமுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நிலங்கள் பறிபோய் விடும்.

விருதுநகர் மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா மற்றும் அங்கீகாரம் எளிதில் கிடைத்து விடுகின்றன. விருதுநகரில் பொது பாதைகள், கண்மாய்கள், ஊரணிகளை ஆக்கிரமித்து சொந்தமாக்கும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வருவாய்த்துறை, பத்திர பதிவுத்துறையில் சிலர் உதவியாக இருந்து வருகின்றனர். இதனால், அரசு புறம்போக்கு நிலங்கள் நாளுக்கு நாள் பறிபோய் வருகின் றன.

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு எண்ணிக்கை வருமாறு: ராஜபாளையம்&98, திருவில்லிபுத்து£ர்& 15, சிவகாசி& 168, விருதுநகர்& 43, அருப்புக்கோட்டை& 43 என நகராட்சிகளில் இனம் காணப்பட்ட 372 ஆக்கிரமிப்புகள் மூலம் 75.6 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சேராது. ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தாலும் குறிப்பிட்டு செல்லும் அளவில் சில ஆக்கிரமிப்புகள் மட்டும் இனம் காணப்பட்டுள்ளது: சிவகாசி&14, ராஜபாளையம்&3, விருதுநகர்&4, சாத்து£ர்&12, திருவில்லிபுத்து£ர்&9, வெம்பக்கோட்டை&32, நரிக்குடி&72, திருச்சுழி&1, காரியாபட்டி&5, அருப்புக்கோட்டை&35 என 187 ஆக்கிரமிப்புகள் மூலம் 31.44 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையில் சிக்கியுள்ளன.

பேரூராட்சிகளை பொறுத்தவரையில் சேத் து£ர்& 21, வத்திரா யிருப்பு&2, மம்சாபுரம்&1, .புதுப்பட்டி&4,காரியாபட்டி&1, மல்லாங்கிணறு&4 என 33 ஆக்கிரமிப்புகள் மூலம் ஒரு ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் விவரம்:

ராஜபாளையம்&109, திருவில்லிபுத்து£ர்&577, சிவகாசி&275, சாத்து£ர்&14, விருதுநகர்&20, அருப்புக்கோட்டை&51, காரியாபட்டி&10 என ஆயிரத்து 56 ஆக்கிரமிப்புகள் மூலம் 58 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையில் சிக்கியுள்ளன.

மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 648 ஆக்கிரமிப்புகள் மூலம் 166.04 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள் சேர்த்தால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நிலங்கள்ஆக்கிரமிக்கப்பட்டு அதிர்ச்சி தகவலும் கிடைக்கும். கண்மாய்களுக்கு நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பால் பல கண்மாய்கள் தூர்ந்து வரும் நிலையில் உள்ளன.

ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கண் துடைப்புக்காக தகவல் கூறினாலும் எண்ணற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கியுள்ளன. உரியமுறையில் அதிகாரிகள் தலையிட்டு மீட்டால் மட்டுமே அரசு நிலங்கள் முழுமையாக திரும்ப பெற முடியும்.

 


Page 87 of 204