Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு

Print PDF

தினமணி 23.07.2010

ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு

கோபி, ஜூலை 22: கோபி நகர் மற்றும் ஈரோடு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் முக்கிய ரோடுகள் அகலப்படுத்தும் பணி. சிறுபாலங்கள் மற்றும் சாலை சீரமைத்தல் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் துவங்கும் முன்பு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்பந்தப்படவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உதகை-கோத்தகிரி சாலை, மேட்டுப்பாளையம்-சத்தி சாலை, கோபி-ஈரோடு சாலை, கோபி-ஊத்துக்குளி படியூர் சாலை, கோபி மொடச்சூர் மற்றும் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள செவ்வாய்க்கிழமை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

கோபி பஸ் நிலையம், மொடச்சூர் மற்றும் ஈரோடு-சத்தி ரோடுகளில் பல இடங்களில் தண்டோரா மூலம் நகராட்சி ஊழியர் அறிவிப்பு செய்தார்.

 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 23.07.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குறிஞ்சிப்பாடி : வடலூர் பஸ் நிலையத்தில் நடை பாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.வடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நடை பாதைகளை கடை உரிமையாளர் கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவுபடுத்தி இருப்பதாகவும், இதனால் நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் குறிஞ்சிப்பாடி மண்டல தாசில்தார் வீரப் பன், வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் விஜய் ஆனந்த் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆக் கிரமிப்புகளை அகற்றினர்

 

அடுத்த மாதம் பணி தொடங்கும் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு 31ல் இடிப்பு நெடுஞ்சாலை பொறியாளர் உறுதி

Print PDF

தினகரன் 22.07.2010

அடுத்த மாதம் பணி தொடங்கும் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு 31ல் இடிப்பு நெடுஞ்சாலை பொறியாளர் உறுதி

செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டு நகரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக காலி செய்யும்படி நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அங்கு குடியிருந்தவர்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.

இதுகுறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்ட பொறியாளர் லோகநாதன் தலைமை வகித்தார். தாசில்தார் வெங்கடேசன், மின்வாரிய பொறியாளர் மோகன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன், செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாவே காலி செய்து கொள்ள 30ம் தேதி வரை அவகாசம் வழங்குவது, 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய லோகநாதன், ‘செங்கல்பட்டு கோட்டத்தில் 2153 கி.மீ. தார்ச்சாலை உள்ளது. மதுராந்தகம், சிங்கப்பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் இடிக்கப்படும். நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான சிறு இடத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்என்றார்.

சாலையோர பெட்டிக்கடை உரிமையாளர்கள், தங்களுடைய கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி தங்களிடம் வாடகை வசூல் செய்தாக அவர்கள் கூறினர். நகராட்சியிடம் வேறு இடம் கேளுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

 


Page 89 of 204