Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்

Print PDF

தினமணி 21.06.2010

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்

முதுகுளத்தூர், ஜூன் 20: முதுகுளத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. முதுகுளத்தூரில் கமுதி சாலை, பஸ் நிலைய சாலை, தேரிருவேலி சாலை, பரமக்குடி சாலை ஆகியவற்றில் ஓரமாக கடைகளுக்கு முன்பாக சிறிய கட்டடங்கள் கட்டப்பட்டும், கொட்டகைகள் போடப்பட்டும், மேஜைகள் போட்டும் ஆக்கிர மிக்கப்பட்டிருந்தன. இதனால் வாகனப் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக இருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றல் குறித்து முதுகுளத்தூர் வர்த்தக சங்கத்தினருக்கு வட்டாட்சியர் எம்.செல்வராஜ், டி.எஸ்.பி. தில்லைராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பிச்சை பேரூராட்சி செயல் அலுவலர் பா. முனியாண்டி ஆகியோர் முறைப்படி தகவல்கள் தெரிவித்திருந்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வர்த்தக சங்கத் நிர்வாகிகளை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து விவரித்தனர். இதன் காரணமாக வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். ஆனால், பலரும் ஆககிரமிப்புகளை சிறிதளவே அகற்றி இருந்தனர். இதனால் அதிகாரிகள் இறுதி அறிவி ப்பு கொடுதத்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸôர் உதவியுடன் பேரூராட்சிப் பணியாளர்கள், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பலரும் சென்று சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பள்ளிவாசல் மேனிலைப் பள்ளி முன்பாக சாலையோரம் இருந்த மரக்கன்றுகள், சிறிய மரங்கள் ஆகியவற்றை அகற்றியபோது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக த்தினர் திரண்டு வந்து, மரக்கன்றுகளை அகற்றக் கூடாது என்று தடுத்தனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Last Updated on Monday, 21 June 2010 07:33
 

அனுமதியற்ற விளம்பரம் அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன் 18.06.2010

அனுமதியற்ற விளம்பரம் அகற்ற உத்தரவு

கோவை, ஜூன் 18: கோவை நகரில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக, சாலையோரத்தில் சுவர் ஓவியம் வரைப்படுகிறது.

நகர் பகுதி சாலை ஓர சுவர்கள் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் வாழ்க்கை முறை ஓவியங்களால் அழகாகி வருகிறது. ஆனால் சில இடங்களில் ஆட்சேபகரமான சுவர் விளம்பரம், அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. அனுமதியற்ற விளம்பர பலகைகள் கட்டங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை 3 நாளில் அகற்றவேண்டும். அனுமதி பெற்று பலகை வைத்தவர்கள் அந்த விவரங்களை எழுதி வைக்கவேண்டும். 3 நாளில், பலகை வைத்தவர்கள் அகற்றவேண்டும். விளம்பர நிறுவனங்கள், வியாபாரிகள், கட்டட உரிமையாளர்கள், விளம்பர பலகையை அகற்றி நகர சாலையை அழகாக மாற்றவேண்டும். கோவை மாநகருக்கு செம்மொழி மாநாடு நேரத்தில் பெருமை சேர்க்கவேண்டும் என கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அனுமதியற்ற விளம்பரத் தட்டிகளை அகற்ற மூன்று நாள் கெடு

Print PDF

தினமணி 18.06.2010

அனுமதியற்ற விளம்பரத் தட்டிகளை அகற்ற மூன்று நாள் கெடு

கோவை, ஜூன் 17: கோவை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று, கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா கெடு விதித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:

கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் வண்ணமயமாக ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

மாநகரின் சில இடங்களில் ஆட்சேபகரமான சுவர் விளம்பரங்களும், அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளும் அகற்றப்படாமல் உள்ளன. பெரும்பாலான அனுமதியற்ற ஆட்சேபகரமான விளம்பரங்கள் கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வகையான அனுமதியற்ற விளம்பரங்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை மூன்று தினங்களுக்குள் அதற்கு பொறுப்பாளர்கள் அகற்ற வேண்டும். அனுமதி பெற்றவர்கள் அதன் விவரங்களை எழுதி வைக்க வேண்டும்.

விளம்பர நிறுவனங்கள், வியாபாரிகள், கட்டட உரிமையாளர்கள், அனுமதியற்ற விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், பிரதான சாலைகளில் உள்ள அவரவர் வீடு அல்லது நிறுவனங்களின் சுற்றுச்சுவர்களில் வண்ணம் பூசியும், ஓவியங்கள் வரைந்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வரவேற்க தயாராக வேண்டும்.

 


Page 92 of 204