Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

100 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 11.06.2010

100 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு அவிநாசியில் ரோடு விரிவடைகிறது அவிநாசியில் நூறு ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த கட்டடங்களை வருவாய்த் துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினார். இதன் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வழியே தேசிய நெடுஞ்சாலை எண்: 47 செல்கிறது. இந்த ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெரிசலை தவிர்க்க போலீசார் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்.

இருப்பினும், அதற்கு பாதியளவு பலன் மட்டுமே கிடைத்தது.கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், அவிநாசி வழியே செல்லக்கூடும் என்பதை கணித்த போலீசார், தற்போதுள்ள ரோட்டை அகலப்படுத்த கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.கலெக்டர் சமயமூர்த்தி, சம்பந்தப்பட்ட திகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டியுள்ள, வருவாய்த்துறைக்கு சொந்தமான க.., எண்: 85பி/2ல் உள்ள கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இப்பணியில் முதல்கட்டமாக, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்த அய்யப்பன், எல்லை மாகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன், வெள்ளை விநாயகர் உள்ளிட்ட ஏழு கோவில்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், கடந்த மாதம் 14ம் தேதி இடித்தனர். இதில் கிடைத்த இடத்தை கொண்டு, கருணாம்பிகா தியேட்டர் முதல் அய்யப்பன் கோவில் இருந்த இடம் வரை ரோட்டின் மையத்தில் டிவைடர்களை போக்குவரத்து போலீசார் வைத்தனர்.இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வு காணப்பட்டது. இதற்கிடையே, .., எண்: 85பி/2ல் உள்ள கட்டடங்களை, குடியிருப்புகளை 7ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென்ற படிவம்-6 நோட்டீஸ் சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு எல்லையில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இடிக்கப்பட்டது. கடை வீதி கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்த பின்பும், கூடுதலாக இரு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிவுற்ற நிலையில், நேற்று காலை 8.00 மணி முதல் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கும் பணி துவங்கியது.பெரிய தேர் நிலையத்துக்கு மேற்குப்புறத்தில் துவங்கிய இப்பணி தொடர்ந்து நீடித்தது. இடிப்பு பணியில் 10 பொக்லைன் இயந்திரங்கள், ஐந்து லாரிகள் பயன்படுத்தப்பட்டன. திருப்பூர் ஆர்.டி.., சொக்கன் தலைமையில், தாசில்தார் சென்னியப்பன், வருவாய் ஆய்வாளர்கள் பழனிசாமி, ஆறுமுகம், சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவாஜி, ரங்கசாமி, பாலு உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்காணித்தனர்..டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில், டி.எஸ்.பி.,க்கள் காமராஜ் (அவிநாசி), ராமலிங்கம் (பல்லடம்), முருகானந்தம் (உடுமலை), 10 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்..,க்கள், 95 போலீசார், 50 சிறப்பு போலீசார் என 188 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அவிநாசி கோட்ட உதவி செயற்பொறியாளர் மாதேஸ்வரன், மின்வாரிய கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன் (கோவில்), கதிரவமூர்த்தி (பேரூராட்சி) உட்பட அந்தந்த துறையினரும் ஆக்கிரமிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். கட்டடங்களை இடிக்கும் பணிக்கு வசதியாக, மெயின் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. வாகனங்கள், ராயம்பாளையம், ராயன் கோவில் வழியாக திருப்பி விடப்பட்டன. இடிக்கும் பகுதிகளை பார்க்க பொதுமக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

விடிய விடிய "காலி' செய்த உரிமையாளர்கள்: அவிநாசி கடை வீதியில் <உள்ள கட்டடங்களை இடிப்பது உறுதியான நிலையிலும், பொதுமக்கள் தரப்பில் பல்வேறு யூகங்கள் எழுந்தன. "15 அடிக்கு மட்டுமே இடிக்கின்றனர்; குடியிருப்புகளை இடிப்பதில்லை; அனைவரும் "ஸ்டே' வாங்கியுள்ளதால், இடிக்க மாட்டார்கள்,' என்ற பல தகவல்கள் பரவின. இதனால், கட்டட, குடியிருப்பு உரிமையாளர்கள் குழப்பம் அடைந்ததால், நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் "தண்டோரா' போட்டனர். இதன் பிறகே, கடைகள் முழு வீச்சில் காலியாயின. நேற்று முன்தினம் மாலை துவங்கிய, கடைகளை காலி செய்யும் பணி, நேற்று காலை 6.00 மணி வரை தொடர்ந்தது.

விடிய விடிய கடை உரிமையாளர்கள், ஆட்களை நியமித்துக் கொண்டு, தங்களது உடைமைகளை சரக்கு ஆட்டோ மூலம் கொண்டு சென்றனர். ரூ.100 கோடி நிலம் மீட்பு: அவிநாசி கடை வீதி க.., எண்: 85பி/2ல் இருந்த கட்டடங்கள் நேற்று அகற்றப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் இடைக்கால தடை பெற்றதால், அக்கட்டடங்களை தவிர, பிற கட்டடங்கள் இடிக்கப்பட்டன. "அவிநாசி வரலாற்றில் 100 ஆண்டு காலமாக இருந்த கட்டடங்கள், வீடுகள் மீட்கப்பட்டதன் மூலம், தற்போதைய மார்க்கெட் மதிப்புப்படி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதாக,' அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடத்தை மீட்க 1993ம் ஆண்டில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தான் வெற்றி கிடைத்துள்ளது என்று வருவாய்த்துறையினர் கூறினர். ரூ.100 கோடி நிலம் மீட்கப்பட்டாலும் கூட, அந்த இடத்தை கம்பி வேலி அமைத்து<, உரிய துறை வசம் ஒப்படைத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- நமது நிருபர் -

 

அனுமதியற்ற விளம்பரங்களை அகற்ற கமிஷனர் கெடு: கோவையை அழகுபடுத்த அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 09.06.2010

அனுமதியற்ற விளம்பரங்களை அகற்ற கமிஷனர் கெடு: கோவையை அழகுபடுத்த அதிரடி நடவடிக்கை

கோவை : கோவை நகரிலுள்ள விளம்பர பேனர்கள் மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற மாநகராட்சி கமிஷனர் கெடு விதித்துள்ளார்.

கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை நகரை அழகுபடுத்தும் விதமாக, புதிய பூங்காக்கள், நடைபாதைகள், நடைபாதை பூங்காக்கள் அமைக்கப்பட்டு, சுவர் ஓவியங்கள் வரையப்படுகின்றன.பல கோடி ரூபாய் செலவில் நகரம் முழுவதையும் அழகு படுத்தும் பணி நடந்தாலும், அத்தனை அழகையும் மறைக்கும் வகையில், சாலையோரங்களிலும், மின் கம்பங்கள், பயனற்ற தொலைத் தொடர்பு கம்பங்கள் அனைத்திலும் விளம்பரங்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. தனியார் நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் சார்பில் அனுமதியின்றி, நகரம் முழுவதும் ஏராளமான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.

நகரை அழகு படுத்தியும் அவை மக்களின் பார்வைக்குத் தெரிவதில்லை. சில நிறுவனங்கள், கடைகள் அல்லது நிறுவனங்களின் முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பதற்காகவே, செம்மொழி மாநாடுக்கு வாழ்த்துச் சொல்வதைப்போல விளம்பர பேனர்களை வைத்துள்ளன. அரசியல் பிரமுகர்களும், முதல்வர், துணை முதல்வர் படத்தை வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். தி.மு..,வினரால் இத்தகைய பிரமாண்ட பேனர்கள் வைத்ததை முதல்வரும், துணை முதல்வரும் பகிரங்கமாகவே கண்டித்துள்ளனர். இருந்தும், மாற்றுக் கட்சியினர், தனியார் அமைப்புகளின் சார்பில் ஏராளமான விளம்பர பேனர்கள், எந்த வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நெருங்கும்போது, விளம்பர பேனர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது நிச்சயம்.

இதேபோன்று, கோவை நகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளும் மீண்டும் அளவுக்கு அதிகமாக முளைத்து வருகின்றன. முந்தைய கலெக்டர் பழனிக்குமார், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். தற்போதுள்ள கலெக்டர் உமாநாத்துக்கு, செம்மொழி மாநாட்டுப் பணிகளைக் கவனிக்கவே போதிய நேரமிருப்பதில்லை.கடந்த சில மாதங்களில் கோவை நகரம் முழுவதும் பல இடங்களில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நகரை அழகு படுத்தும் பணிக்காக, பல்வேறு தனியார் அமைப்புகளும், தங்கள் பணத்தைச் செலவழித்து வரும் நிலையில், எந்த அனுமதியுமில்லாமல் அரசியல்பிரமுகர்களின் ஆதரவில் இந்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள இந்த விளம்பரங்களை அகற்றினால் மட்டுமே, கோவை நகரை அழகு படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துக்கும் பலன் கிடைக்கும். இது குறித்து வந்த கோரிக்கையை அடுத்து, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, நேற்று நகரம் முழுவதும் ஆய்வு செய்தார்.அப்போது, நகரின் பல பகுதிகளிலும் ஏராளமான விளம்பர பலகைகள் இருப்பதை அறிந்தார். அவற்றில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் இருந்த சில விளம்பரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மற்ற விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ""கோவை நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அனைத்தையும், மூன்று நாட்களுக்குள் (ஜூன்10) அகற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல, மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளையும், ஒரு வாரத்துக்குள் (ஜூன் 14) அவர்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். அகற்றப்படாத விளம்பரங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றும்; அதற்கான தொகை, அந்தந்த நிறுவனத்திடம் வசூலிக்கப்படும்,'' என்றார். எச்சரித்தபடியே, விளம்பர பேனர்களையும், விளம்பரப் பலகைகளையும் அகற்றினால் மட்டுமே, கோவை நகரை அழகு படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் முழு வெற்றி பெறும். இந்த விஷயத்தில், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் அவசரக் கடமையாகும்.

அகற்றாததன் பின்னணி! கோவை ரயில்வே ஸ்டேஷனிலும் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெறாமல் ஏராளமான விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் செலவில், ரயில்வே ஸ்டேஷன் முகப்பை அழகு படுத்தியும், அவை மக்கள் பார்வைக்குத் தெரியாமல் விளம்பரங்கள் மறைக்கின்றன. இதற்கு ரயில்வே துறையிலேயே எதிர்ப்பு இருந்தாலும், அதிகாரிகள் சிலர் இதனால் பயன் பெறுவதால் இவற்றை எடுக்க மறுத்து வருவதாகத் தெரிகிறது. அங்குள்ள விளம்பரங்கள் மற்றும் பெயர்ப் பலகைகள் அனைத்தையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கோயில்கள் இடிப்பு

Print PDF

தினகரன் 08.06.2010

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கோயில்கள் இடிப்பு

திருச்சி, ஜூன் 8:ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்பட்டன. தெப்பக்குளம் கோட்டை வாசல் முதல் காந்தி மார்க்கெட் வரையிலான ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட இப்ராஹீம் பார்க் அருகில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், மேலப்புலிவார்டு ரோடு பகுதியில் உள்ள மூக்கரையர் விநாயகர் கோயில் மற்றும் வீரராஜ்ய விநாயகர் கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். கோயில்களை இடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநகர செயலாளர் பார்த்தீபன், கோட்ட பொறுப்பாளர் திருமலை உள்பட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்னர். கோயில்கள் இடிக்கப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கோயிலில் இருந்த சாமிசிலைகள், உண்டியல் மற்றும் நகை வைக்கும் பெட்டகங்களுக்கு சீல் வைத்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதே போல் மாநகராட்சி பகுதியில் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 


Page 97 of 204