Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

போடியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

Print PDF

தினமணி 02.06.2010

போடியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

போடி, ஜூன் 1: போடி நகராட்சியில் திட்டச் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்பு வீடுகளை, நகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

தற்போது, போடி நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10-வது வார்டு வ..சி. நகரில் ஒழுகால் பாதைப் பகுதியில் 40 அடி மற்றும் 60 அடி திட்டச் சாலைகள் செல்கின்றன. இந்த சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு வீடுகள் கட்டியும், பொதுப் பாதையில் வேலி அமைத்தும் குடியிருந்து வந்தனர்.

இது குறித்து, இப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் செய்தனர். அதன்பேரில், நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம், சர்வேயர் அன்னக்கொடி மற்றும் நகராட்சி அலுவலர்கள் அளவீடு செய்ய சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அப்பணி நிறைவேற்றப்பட்டது.

இதில், வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, அவற்றை இடிக்க நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரப்பு வீடுகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தி, பொதுப் பாதையில் போடப்பட்டிருந்த வேலியையும் அகற்றினர்.

மேலும், பிரச்னை ஏற்படாமலிருக்க, போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர்சிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேன்மொழி, ராதாகிருஷ்ணன், கோட்டையப்பன் மற்றும் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில், போடி வட்டாட்சியர் சு. ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர் கூறியது: திட்டச்சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைத்து, தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடியிருப்பு வீடுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெறும் என்றார்.

 

கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 31.05.2010

கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கீழக்கரை, மே 31: கீழக்கரை யில் நேற்று முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கீழக்கரையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சியினர் ஈடுபட்டனர். காலை முக்கு ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.

வள்ளல் சீதக்காதி சாலை, இந்து பஜார் பகுதி மற்றும் கடற்கரை பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்து பஜாரில் சாலைகளில் ஆக்கிரமித்திருந்த பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் டீக்கடைகள் அகற்றப்பட்டன. ஒரு டீக்கடை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி    28.05.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர், மே 27: வேலூர் பில்டர்பெட் சாலையில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை அகற்றினர்.

வேலூர் மாநகரின் பிரதான சாலையான பில்டர்பெட் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், பில்டர்பெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதி கோரினார்.

மேயரின் அனுமதியோடு மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 


Page 101 of 204