Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பெசன்ட் நகர் மயானத்தில் சமாதி இடிப்பு மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Print PDF

தினமலர்         28.05.2010

பெசன்ட் நகர் மயானத்தில் சமாதி இடிப்பு மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் கட்டப் பட்ட சமாதியை இடிக்க தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமாதி இடிக்கப்படவில்லை என்றால், இடிப்பதற்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.பெசன்ட்நகரில் வசிக்கும் டாக்டர் அருள்பிச்சை நாராயணன் தாக்கல் செய்த மனு:எனது தந்தை முத்துகுமாரசாமி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். வடலூர் ராமலிங்க அடிகள் பற்றி பல நூல்களை அவர் எழுதியுள்ளார். 79 வயதில் அவர் இறந்தார்.பெசன்ட்நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது. மாநகராட்சியின் அனுமதி பெற்று, சமாதி அமைத்தோம். பெசன்ட்நகர் மயானத்தில் சில சமாதிகள் உள்ளன.

மயானத்தில் உள்ள சமாதிகளை இடிப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனது தந்தையின் சமாதியை இடிக்கக் கூடாது என மாநகராட்சிக்கு தந்தி அனுப்பினேன். ஆனால், எனது தந்தையின் சமாதியில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல், சமாதியை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முடியாது.

சமாதி கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த போது, அதிகாரிகள் தடுத்தனர். எனவே, மாநகராட்சி கவுன்சிலின் அனுமதி பெற்று கட்டிய சமாதியை இடிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். அதே இடத்தில் மீண்டும் சமாதி கட்டுவதில் மாநகராட்சி குறுக்கீடு செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதிகள் தனபாலன், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.வேல்முருகன்ஆஜரானார்.சமாதி இடிக்கப்படவில்லை என்றால், அதை இடிப்பதற்கு தடை விதித்து "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

 

பேனர்களை அகற்றுவதில் நகராட்சி சுறுசுறுப்பு

Print PDF

தினகரன்      27.05.2010

பேனர்களை அகற்றுவதில் நகராட்சி சுறுசுறுப்பு

பொள்ளாச்சி, மே 27: பொள் ளாச்சி நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள விளம்பர பேனர்களை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் அதிரடி யாக களம் இறங்கியுள்ளது.

பொள்ளாச்சி நகரில் கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, தேர்நிலை, சத்திரம் வீதி, ராஜாமில் ரோடு, தாலுக்கா அலுவலக ரோடு, காந்தி சிலை சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட் முன்பு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகள் வாகன போக்குவரத்து நிறைந்தவையாகும். இதில் பெரும்பாலான இடங்களிலும் வர்த்தக நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் விளம்பர பேனர் களை வைத்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து ஸதம்பித்து பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற விளம்பர பேனர்களால் பல இடங்களில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் விளம்பர பேனர் களை அகற்றும் பணியில் அதிரடியாக களம் இறங்கினர். நகராட்சி அலுவலகம் எதிரே, பஸ் ஸ்டாண்ட் முன்பு, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூ றாக இருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. அதில் வர்த்தக நிறுவனங்களின் பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டு, அரசியல் கட்சியினரின் பேனர்கள் அகற்றப்படவில்லை.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, வர்த்தக நோக்கில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை மட்டும்தான் நகராட்சி நிர்வாகம் அகற்ற முடியும். அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை போலீசார்தான் அகற்ற வேண்டும். அப்பணிக்கு தேவையான ஊழியர்களை நகராட்சி நிர்வாகம் கொடுத்து உதவும், என்ற னர்.

 

சாலையோரத்தில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

Print PDF

தினகரன்         27.05.2010

சாலையோரத்தில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்தபோது கலெக்டர் சண்முகம் பட்டுக்கோட்டை கடைத்தெரு பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையோரங்களில் நிறைந்து இருந்த விளம்பர போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நிரந்தரமாக நிறுவப்பட்டிருந்த போர்டுகள், காலம் கடந்தும் அகற்றப்படாமல் இருந்த போர்டுகள் என 70க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய போர்டுகளை நகராட்சியினர் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதில், மணிகூண்டு, அறந்தாங்கி முக்கம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த போர்டுகள் அகற்றப்பட்டன.

இந்த விளம்பர போர்டு அகற்றுவதில் கலெக்டரின் உத்தரவை ஏற்று அதிரடியாய் செயல்பட்ட அதிகாரிகளிடம், ""இதுபோன்று எப்போதும் செயல்படுங்கள்,'' என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன், பலமுறை ஆர்.டி.., கூட்டம் போட்டும் இதுவரை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்தாதது ஏன் என்பதை கலெக்டர் கேட்டறிய வேண்டும்.

வியாபாரிகள், அனைத்து மோட்டார் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், எம்.எல்.., நெடுஞ்சாலை துறையினர் என அனைத்து தரப்பினரையும் மாதம் மாதம் கூட்டி பல மணிநேரத்தைவீணாக்கி வரும் ஆர்.டி.., மெய்யழகனை,அவரது தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும், என நகரின் அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

 


Page 102 of 204