Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தூத்துக்குடியில் ஆக்ரமிப்பு போர்டுகள் அகற்றம்

Print PDF

தினகரன்      20.05.2010

தூத்துக்குடியில் ஆக்ரமிப்பு போர்டுகள் அகற்றம்

தூத்துக்குடி, மே 20: தூத்துக்குடியில் ஆக்ரமித்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போர்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

தூத்துக்குடியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெற்ற பின்னரே போர்டுகளை வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள்களை அகற்றவேண்டும் என மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மாநகராட்சி பொறுப்பு நகரமைப்பு அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் ஆறுமுகம், காந்திமதி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்ரமிப்புகளை அகற்றினர்.

தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் இருந்து பாளை ரோடு, மார்க்கெட், பழைய பஸ்நிலையம், டபிள்யூஜிசிரோடு, ஜி.சி ரோடு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போர்டுகளை ஜேசிபி உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்படும் போர்டுகள் மற்றும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றம்

Print PDF

தினமணி     20.05.2010

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றம்

தூத்துக்குடி, மே 19: தூத்துக்குடி நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.

தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பேனர்கள், விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் அனுமதியின்றி வைத்திருப்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கும் நோக்குடன் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை தொடங்கினர்.

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியிலிருந்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வரை பாளையங்கோட்டை சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பேனர்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். முதல் நாளில் 50 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகர் அமைப்பு அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன், நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் ஆகியோர் இந்த விளம்பர பலகை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 2-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து விளம்பரப் பலகைகள், பேனர்கள் அகற்றப்படும்.

 

 

மே29ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

Print PDF

தினமலர்     20.05.2010

மே29ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் மே 29ல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கமிஷனர் சுந்தரம் கூறினார். அவர் கூறியதாவது:கீழக்கரை நகராட்சி பகுதியில் வள்ளல் சீதக்காதி சாலை, இந்து பஜார் உட்பட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மே 29ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சியால் அகற்றப் படும் ஆக்கிரமிப்புக்கான செலவுகளை சம்பந்தப் பட்ட நிறுவன உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார். நகராட்சி தலைவர் பஷீர் அகமது உடன் இருந்தார்.

 


Page 106 of 204