Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 04.05.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி தென்னூர் பகுதியில், மழைநீர் வடிகாலில் இருந்த ஆக்ரமிப்பு கட்டிடம், கடைகள் அகற்றப்பட்டன. திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம், தென்னூர் ராமராய அக்ராஹாரம் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மழைநீர் வடிகாலில் கட்டப்பட்ட ஆக்ரமிப்பு கட்டிடம், இரண்டு கடை, ஒரு வீடு, நான்கு மதில்சு வர் அகற்றப்பட்டன.ஆக்ரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் நாகேஷ், இளநிலைப் பொறியாளர் ஜெகஜீவன்ராம் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்..சி., ஞானசேகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:24
 

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் அடுத்தகட்டமாக பல்லடம் ரோடு

Print PDF

தினமலர் 04.05.2010

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் அடுத்தகட்டமாக பல்லடம் ரோடு

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அடுத்தகட்டமாக, பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரின் பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி ரோட்டில் இரு மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்., 28ல் இருந்து திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வத்சலா வித்யானந்தி மற்றும் உதவி பொறியாளர் பாலாமணி தலைமையில், சாலை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். விதிமுறையை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள், தட்டிகளும் பறிமுதல் செய்து, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான லாரியில் அள்ளிச்செல்லப்பட்டன. தாராபுரம் ரோடு செட்டிபாளையத்தில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் சிக்னல் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி சர்வே துறையினர், நில அளவைப் பணியில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ் சாலைத்துறையினருக்கு உதவி செய்தனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'பிரதான ரோடுகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப் படும். தாராபுரம் ரோட்டில் முதல் கட்டப்பணி நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற் றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் படும்,' என்றனர

Last Updated on Tuesday, 04 May 2010 06:11
 

பழைய பஸ்நிலையம் அருகே விநாயகர் கோயில் இடிப்பு

Print PDF

தினமணி 03.05.2010

பழைய பஸ்நிலையம் அருகே விநாயகர் கோயில் இடிப்பு

திருப்பூர், மே 2: சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, திருப்பூர் பழைய பஸ்நிலையம் முன்பு கட்டப்பட்டிருந்த சுந்தர விநாயகர் கோயிலை மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர்.

பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க, திருப்பூர் மாநகரிலுள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பழைய பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன.

அதன்படி, காமராஜர் சாலையிலுள்ள மாநகராட்சி கடைகள், செல்வவிநாயகர் கோயில் மற்றும் பழைய பஸ்நிலையம் முன்புள்ள சுந்தர விநாயகர் கோயில் ஆகியவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டு கடந்த பிப். 9-ம் தேதி பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக அங்கிருந்த செல்வவிநாயகர் கோயில் இடித்து அகற்றப்பட்டது.

தொடர்ந்து, பழைய பஸ்நிலையம் முன்புள்ள சுந்தர விநாயகர் கோயிலையும் இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக கோயிலில் இருந்த சாமிசிலையை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிப்ரவரி இறுதியில் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோயிலை இடிக்கும் பணி கைவிடப்பட்டது. பிறகு அக்கோயிலுக்கு வேறு இடம் ஒதுக்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அக்கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில், காலை 6 முதல் 9 மணி வரை இக்கோயில் இடிப்பு பணி நடந்து முடிந்தது. பாதுகாப்புக்காக டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர்.

 


Page 112 of 204