Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால் மீட்பு

Print PDF

தினமலர் 29.04.2010

ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால் மீட்பு

தேனி,: தேனியில், 'பிளாட்' போடுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால் முழுமையாக மீட்கப் பட்டது. தேனியில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சடையாள்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பகுதியில் பொதுப்பணித் துறை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலுக்கு கொட்டகுடி ஆற்றில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் 140 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.தற்போது இப்பகுதியில் நிலம் வாங்கி 'பிளாட்' அமைக்கும் பணியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பொதுப் பணித்துறை வாய்க்காலை மூடி ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தி வந்தனர்.தண்ணீர் செல்வதற்கு மட்டும் பெயரளவில் பைப் பதித்து விட்டு, மற்ற இடங்களை மேவினர். இது பற்றி கலெக்டர் முத்துவீரனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 'வாய்க்காலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பழைய நிலையில் வைக்க நகராட்சி கமிஷனருக்கும், தேனி தாசில்தாருக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து வாய்க் கால் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப் பட் டது.

Last Updated on Thursday, 29 April 2010 07:03
 

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 29.04.2010

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூர்: கே.செட்டிபாளையம் பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை, நெடுஞ் சாலைத்துறை நேற்று அகற்றியது.திருப்பூரில் தாராபுரம் ரோடு அகல படுத்தப்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கே.செட்டிபாளையம் வரை அகலப்படுத்தும் பணிக்காக, தாராபுரம் ரோட்டில் உள்ள ஆக்கிர மிப்புகளை எடுப்பது குறித்து, ஒரு வாரத்துக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து, உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.எச்சரிக்கைக்கு பின்பும், கே.செட்டி பாளையம் பகுதியில் எடுக்கப்படாமல் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சுவர் பகுதிகளை இடித்து அகற்றும் பணி நடந்தது; பொக்லைன் மூலம் சுவர்கள் இடிக்கப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் மேற்பார்வை யில், உதவி கோட்ட பொறியாளர் வத்சலா வித்யானந்தி, உதவி பொறி யாளர் பாலாமணி மற்றும் வருவாய்த் துறை அலுவலர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருப்பூர் ரூரல் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கே.செட்டிபாளை யம் வரை தாராபுரம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள், ரோடு அகலப்படுத்தும் பணிக்காக அகற்றப்படுகின்றன; 15.7 மீட்டர் அளவில் ரோடு அகலப்படுத்தப் படுகிறது. இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படும்.ரோட்டை ஆக்கிரமித்து உள்ளவர்கள், தங்களுடைய உடைமைகள், பொருட்களை, நெடுஞ்சாலைத்துறை இடிக்க வருவதற்கு முன்பே அகற்றிக்கொள்ள வேண்டும்; இடிக்கும் பணியின் போது, அப்பொருட்களை நெடுஞ்சாலைத் துறை கைப்பற்றி எடுத்துக்கொள்ளும். அவை, திரும்ப வழங்கப்பட மாட்டாது, என்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:38
 

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

Print PDF

தினமலர் 29.04.2010

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பகுதி ஆக்கிரமிப்புகளை மே இரண்டாம் தேதிக்குள் அகற்ற கெடு விதிக்கப்பட்டு தண்டோரா மூலம் அறிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தில் ரோட்டோரம், பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதுகுளத்தூரில் கடந்த மார்ச்சில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு துவங்கியது. இதனிடையே , ''ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா ,'' என, அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை பெற்றது. முதுகுளத்தூர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அமைக்கும் பணி ஜரூராக துவங்கி உள்ளது. இதை தொடர்ந்து அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மே இரண்டாம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனவும், பேரூராட்சி சார்பில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 29 April 2010 06:34
 


Page 116 of 204