Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

1,500 கோடி மதிப்புள்ள 52 ஏக்கர் நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 26.04.2010

1,500 கோடி மதிப்புள்ள 52 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை : 'சென்னை மாநகராட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான 52 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளது' என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டப்பணிகள் மீஞ்சூரிலும், நெம் மேலியிலும் நடந்து வருகின்றன. மீஞ்சூர் திட்டம் வரும் ஜூன் மாதக் கடைசியில் முடிக்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படும். நெம்மேலி திட்டத்துக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வரும் 2011 டிசம்பருக்குள் இத்திட்டம் முடிக்கப்படும்.இதன்மூலம், சென்னைக்கு எவ்வளவு மோசமான வறட்சி நிலை ஏற்பட்டாலும், இரண்டு திட்டங்கள் மூலம் தினமும் 200 மில்லியன் கன அடி குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப் படும். அடையாறு பூங்கா 358 ஏக்கரில் நூறு கோடி ரூபாயில் அமைக்கும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.முதல் கட்டமாக அடையாறு பூங்காவில் 58 ஏக்கரில் பணிகள் சிறப் பாக நடந்து வருகின்றன. இதுவரை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. நீர்நிலை, நில அபிவிருத்தி, நடைபாதை போன்ற பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. தற்போது பலவிதமான பறவைகள் இங்கு வரத் துவங்கியுள்ளன. 200க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த பூங்காவை வரும் ஜன., 14ம் தேதி தை முதல் நாளன்று, முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். சென்னை மாநகராட்சி, ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரும் சாதனை படைத் துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 52 ஏக்கர் நிலத்தை, தனியாரிடம் இருந்து மாநகராட்சி மீட்டுள்ளது. இதன் மதிப்பு 1,500 கோடி ரூபாய்.

பெரம்பூர் உட்பட 10 மேம்பாலங் கள் கட்ட, சென்னை மேயராக நான் இருந்த போது அடிக்கல் நாட்டப் பட்டது. மண் ஆய்வு, தொழில்நுட்ப நிலையில் பெரம்பூர் பாலத்துக்கு மட்டும் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் இப்பாலம் பற்றி என்ன செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், வடிவமைப்பை மாற்றி, அண்ணா பல்கலையில் ஆய்வு அறிக்கை பெற்று, புதிதாக டெண்டர் விடப் பட்டு, பெரம்பூர் மேம்பாலப் பணிகள் துவங்கின. கட்டவே முடியாது, சாத்தியமில்லை என்று கூறியதை சவாலாக ஏற்று, பணிகளை நிறைவேற்றி, கடந்த மாதம் முதல்வர் இப்பாலத்தை திறந்து வைத்தார்.எந்த பாலத்துக்காக முதல்வர் கருணாநிதியை கைது செய்து, கொடுமைப்படுத்தினார்களோ, அதே பாலத்தை அவரே முதல்வராக வந்து, கட்டி முடித்து திறந்து வைத்துள்ளார். இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.

 

Last Updated on Tuesday, 27 April 2010 06:06
 

ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அகற்றிக் கொள்ள 'அட்வைஸ்'

Print PDF

தினமலர் 26.04.2010

ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அகற்றிக் கொள்ள 'அட்வைஸ்'

அவிநாசி : ''ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை, ஒரு மாதத்துக்குள் தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், அரசே அகற்றும்,'' என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்துள்ளார்.திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ராக்கியாபாளையத்தில் இலவச 'டிவி' வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜம்புநாதன் வரவேற்றார்.

கலெக்டர் சமயமூர்த்தி பேசுகையில், ''திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில், முதல்கட்டமாக 5,276 குடும்பத்துக்கு இலவச 'டிவி' வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 273 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது ஆறாவது பேரூராட்சியாக திருமுருகன்பூண்டியில் வழங்கி வருகிறோம்,'' என்றார்.

பயனாளிகளுக்கு 'டிவி' களை வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. இங்கு செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. பேரூராட்சி தலைவர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்று பாகுபாடு எதையும் பாராமல், முதல்வர் சேவையாற்றி வருகிறார். இப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அதன் உரிமையாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் அரசே அகற்றி, சாலை விரிவாக்கம் செய்யப்படும்.

போக்குவரத்து நெருக்கடி குறித்து அறிந்த பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 2006 முதல் நடப்பாண்டு வரை 365 பணிகள் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இன்னும் பல பணிகள் நடக்க உள்ளன. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.முன்னதாக, அம்மாபாளையம் - ராம்நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.11 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.ஆர்.டி.., சையத் ஹூமாயூன், தாசில்தார் சென்னியப்பன், பேரூராட்சி தலைவர் கோபால், ஒன்றிய நியமன குழு உறுப்பினர் சாமிநாதன், நகர தி.மு.., செயலாளர்கள் குமார் (பூண்டி), ரவி (அவிநாசி) உட்பட பலர் பேசினர். செயல் அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.

Last Updated on Monday, 26 April 2010 06:29
 

நந்தனத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: 8 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்பு

Print PDF

தினமணி 24.04.2010

நந்தனத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: 8 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்பு

சென்னை,ஏப்.23:நந்தனத்தில் 16 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, ரூ. 10 கோடி மதிப்பிலான 8 ஆயிரம் சதுர அடி நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

சென்னை நந்தனத்தில் அண்ணா சாலை, கால்நடை மருத்துவமனை சாலை சந்திப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் 16 கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது, மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. சைக்கிள் கடை, வெற்றிலை கடை, டீ கடை, வெல்டிங் கடை என 16 கடைகள் ஆக்கிரமித்திருந்தன.

மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இரண்டு ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் 20 மாநகராட்சி ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ. 10 கோடி மதிப்பிலான 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

 


Page 118 of 204